districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரை புத்தகத் திருவிழாவில் இன்று

மதுரை  புத்தக திருவிழாவில் அக்டோபர் 3 திங்களன்று மாலையில்  எழுத்தாளர்கள்  இந்திரா சௌந்திரராஜன், சாத்தூர் லட்சுமணப்பெருமாள்   தமுஎகச மூத்த  தலை வர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்  ஆகியோர் உரை யாற்றுகின்றனர்.

பாஜக கருத்தில் உடன்பாடில்லை; கூட்டணியும் இல்லை தேமுதிக பிரேமலதா பேட்டி

திண்டுக்கல், அக்.2- நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற பாஜகவின் கருத்தில் உடன் பாடில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.  திண்டுக்கல்லில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த அவர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில்,  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்ட மன்றத்திற்கும் தேர்தல் வரும் என்று பாஜக  தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். தேமுதிகவை பொறுத்தவரை நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்று கேட்டுக்  கொள்கிறோம். இப்போது பாஜக-அதிமுக கூட்டணியில் தேமுதிக கிடையாது. தற்போது வரை எந்த கூட்டணி யிலும் கிடையாது என்று தெரிவித்தார்.  (நநி)

நீர்மட்டம் சரிவு எதிரொலி  பெரியாறு அணையில்  நீர் திறப்பு குறைப்பு

தேனி,அக்.2- நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் முல்லைப்பெரி யாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப் பட்டுள்ளது. மழைப்பொழிவு குறைந்த நிலையில் முல்லை பெரி யாறு அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இருந்த போதும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட தால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வரு கிறது. எனவே இரண்டாம் போக நெல் சாகுபடியை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். வைகை அணையில் நீர்மட்டத்தை நிலை நிறுத்த முல்லைபெரியாறு அணை யில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொதுப்  பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். மேலும்  நீர் திறப்பை படிப்படியாக குறைத்தனர். சனிக்கிழமை  1555 கனஅடிநீர் திறக்கப்பட்டது. ஞாயிறு  காலை நீர்திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 1400 கனஅடி நீர்  திறக்கப்பட்டது. வைகை அணையின் நீர்மட்டம் 68.55 அடி யாக உள்ளது. 1258 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2219 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 55 அடி, 10 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83  அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் 3 கன அடிநீர் திறக்கப்படுகிறது.