districts

img

ரயில்வே அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை

திண்டுக்கல், ஏப்.27 ரயில்வே அதிகாரிகளிடம் பல பிரச்சனைகளை எடுத்து கூறினாலும் அதை தீர்க்க முன்வருவதில்லை. எனக்கு வேதனையாக உள்ளது என்று  திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி தெரிவித்தார்.  திண்டுக்கல் வர்த்தகர் சங்கத்தில் ரயில்வே அதி காரிகளுடன்  புதனன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்  றது. இந்த கூட்டத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் கலந்து கொள்வதாக இருந்தது. அவர் வராத கார ணத்தால் முதுநிலை வணிக மேலாளர் கலந்து கொண்  டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை அமைச்சரிடம் நான் பல கோரிக்கைகளை வைக்கிறேன் அவர் கூட எனது கருத்தை கனிவாக ஏற்றுக்கொண்டு செய்து தருகிறார். ஆனால் ரயில்வே துறை அதிகாரிகள் நான் எதை சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை.  திண்டுக்கல் ரயில் நிலை யத்தில் 9 அதி விரைவு ரயில்கள் நிற்காமல் செல்கின் றன. தற்போது 2 ரயில்கள் தான் நிற்கின்றன. மற்ற ரயில்களையும் இங்கு நிறுத்த முயற்சி கொள்வேன் என்று கூறினார். 

நகரும் படிக்கட்டுக்கள் அமைத்திடுக!

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுக்கள் அமைத்திட வேண்டும்.  ரயில் நிலை யத்தில்  பொதுமக்கள் அனைத்து நடைமேடைகளுக் கும் செல்ல நியாயமான கட்டணத்தில் பேட்டரி கார்கள் இயக்க வேண்டும். ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் தரமான உணவு வழங்க வேண்டும். அனைத்து நடைமேடைகளிலும் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிக்கப்பட வேண்டும் என்று திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் சி.சீனிவாசன் கேட்டுக்கொண்டார். 

டெமோ ரயிலை திண்டுக்கல் வரை இயக்கிடுக!

திண்டுக்கல் வணிகர்கள் சங்கங்களின் பேர மைப்பு சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு வில்,  பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலம், கரூர்  ரோடு சுரங்கப்பாதை ஆகிய பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். சேலத்திலிருந்து கரூர் வரை செல்லும் டெமோ விரைவு ரயிலை திண்டுக்கல் வரை நீட்டிக்க வேண்டும். திருச்சியிலிருந்து புறப்படும் சோழன் விரைவு ரயில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் செயல்  படும் பொள்ளாச்சியிலிருந்து கோவை செல்லும் ரயிலை திண்டுக்கல்லில் இருந்து இயக்க வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து சென்னை, மற்றும் பெங்க ளுரு ரயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்பட வேண்டும்.  மேட்டுப்பாளையத்திலிருந்து மயிலாடுதுறை வரை  இயக்கப்படும் ரயில் பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல்,  திருச்சி வழியாக இயக்கப்பட வேண்டும். திண்டுக்கல் லிற்கு வந்து செல்லும் ரயில்கள் 3 நிமிடம் மட்டுமே நின்று செல்கின்றன. அவை 5 நிமிடங்கள் நிற்க வேண்டும். ஒவ்வொரு பிளாட்பாரங்களிலும் ரயில் தக வல் குறித்த டிஜிட்டல் தகவல் பலகை வைக்க வேண்டும். முதல் நடைமேடையிலிருந்து கடைசி நடைமேடை வரை  சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும். மாற்றுத்திற னாளிகள், முதியோர், பெண்கள், குழந்தைகள் எளிதில் செல்ல இரண்டு பேட்டரி கார்கள் இயக்க வேண்டும். ரயில் நிலையம் முன்புள்ள பூங்காவை பராமரிக்க வேண்டும். நீருற்று அமைக்க வேண்டும். அழகுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.

பழனியிலிருந்து சென்னைக்கு ரயில் 

பழனி வர்த்தகர்கள் சங்கம் சார்பாக கொடுக்கப் பட்ட மனுவில்,  பழனியிலிருந்து திருச்சி வழியாக சென்னைக்கு ரயில் விட வேண்டும். அதே போல் பழனி யிலிருந்து கும்பகோணம், மயிலாடுதுறைக்கு ரயில் இயக்க வேண்டும். பழனியிலிருந்து கோவைக்கு தின சரி ரயில் சேவை இருப்பது போல பழனியிலிருந்து திருச்சிக்கு தினசரி ரயில் சேவை வேண்டும். பழனி யில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திரு விழாக்காலங்களில் 10 நாட்களுக்கு சிறப்பு ரயில் வசதி  செய்து தர வேண்டும். பழனி தாராபுரம் ரோட்டில் புதிய  மேம்பாலம் கட்டித்தர வேண்டும். ரயில் வே கேட்  மூடப்பட்டால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது. ஆம்புலன்சுகளில் உள்ள நோயாளிகளும் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே தாராபுரம் ரோட்டில் புதிய மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பேட்டரி கார் ஸ்பான்சர்ஷிப் எடுத்து நடத்துங்கள்

பெங்களுருக்கு ரயில் விட கோரிக்கை வைத்தி ருக்கிறீர்கள். இங்கிருந்து பெங்களுருவுக்கு ரயில் விட லாம். ஆனால் அதை பெங்களூரு ரயில்வே நிர்வா கம் ஏற்றுக்கொள்கிற நிலையில் இல்லை. பேட்டரி கார்  இயக்க வேண்டும் என்றால் தனியாரிடம் ஸ்பான்சர் வாங்கி நடத்த வேண்டும். தனியார் பாட்டரி கார் இயக்கிக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை பயணிகளிடம் வாங்கிக்கொள்ளட்டும். பேட்டரிக்கு தேவையான கரண்ட் தருகிறோம். அதற்கான தொகை செலுத்த வேண்டும். அதே போல டிஜிட்டல் தகவல் பலகைக்கும் ஸ்பான்சர் செய்தால் தான் நல்லது என்று கோட்ட வணிக மேலாளர் தெரிவித்தார். 

தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்துக!

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உள்ள கவுண் டர்களில் தமிழ் தெரியாதவர்களை வேலைக்கு அமர்த்தி யதால் சாதாரண படிப்பறிவற்றவர்கள், இந்தி தெரியாத வர்களிடம் சிக்கிக்கொண்டு  பெரும் சிரமத்திற்குள்ளா கிறார்கள் என்று வர்த்தகர் ஒருவர் கூறினார். இதற்கு பதில் அளித்த வணிக மேலாளர், அரசு பணியை நோக்கி வருபவர்கள் குறைந்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் நீங்கள் தேர்வு போட்டியாளர்களுக்கு பயிற்சி கொடுத்து பரீட்சை எழுத சொல்லுங்கள். டி.என்.பி.எஸ்.சி. எழுதுகிறவர்கள் ரயில்வே தேர்வு  எழுதுவதில்லை. கேரளாவில் அதிகம் பேர் எழுது கிறார்கள். தமிழ்நாட்டில் எழுதுகிறவர்கள் குறைவு. எனவே தமிழ் தெரிந்தவர்கள் ரயில்வே பணியில் இல்லை என்று தெரிவித்தார். ரயில்வே துறை தனியார்  மயமாக்கப்பட்டு வருகிற நிலையில் புதிதாக ரயில் விடு வது தொடர்பாகவும், ரயில் விவரம் குறித்த டிஜிட்டல்  போர்டு வைப்பது தொடர்பாகவும், நகரும் படிக்கட்டுக் கள் தொடர்பாகவும், பேட்டரி கார் தொடர்பாகவும் ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் எந்த பதிலும் உறுதிப்பட தரவில்லை. ரயில்வே நிர்வாகம் ஸ்பான்சர் ஷிப் எதிர்பார்ப்பதாக  மட்டுமே தெரிவித்தார்.  இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பாக ஜி.சுந்தர்ராஜன், மேடாபாலன், வணிகர் பேர மைப்பு சார்பாக கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (ந.நி.)