districts

img

கனமழையால் திண்டுக்கல் அரசு மருத்துவமனை சுவர் இடிந்தது

திண்டுக்கல், அக்.21- கனமழை வெள்ளம் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது திண்டுக்கல்லில் தொடர்ந்து இரவு நேரத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக விளங்குகிறது.  இரவு நேரத்தில் விழுந்ததால் நல் வாய்ப்பாக உயிர் சேதங்கள் ஏற்படவில்லை ஏற்கனவே இருந்த மிகப்பழமையான காம்பவுண்ட் சுவரை அகற்றாமல் அப்படியே அந்த சுவரின் மீது அதிகமான வலு உள்ள ஹாலோ பிளாக் கற்களை கொண்டு காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டதால் மழைக்காலத்தில் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்துள்ளது.