திண்டுக்கல், நவ.5- திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் 34 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பையோ மெடிக்கல் பொறி யியற்துறையில் படித்த பல்கலைக்கழக அளவில் 5 ஆம் இடத்தையும் 8 ஆம் இடத் தையும் பிடித்து சாதனை புரிந்தனர். திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறி யியற் கல்லூரியில் 34வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெங்களுருவில் உள்ள மானவ் எனர்ஜி. பி.லிட் நிறுவனத்தின் குளோ பல் - எச்.ஆர்.டி. மற்றும் சி.எஸ்.ஆர்.ஓ விஜய் ஆனந்த் கிருஷ்ணன் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரி தலைவர் கே.தனலட்சுமி, இணைத்தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம், முதல்வர் முனைவர் டி. வாசுதேவன் ஆகியோர் பட்டங்களை வழங்கினர். பையோ மெடிக்கல் பொறி யியற் துறையில் அண்ணா பல்கலைக்கழக அளவில் 5வது இடத்தைப் பிடித்த எம். மது மிதா, 8வது இடத்தைப் பிடித்த எம். டயானா, 29வது இடத்தைப் பிடித்த எம்.ஆர். ஸ்வாதி கிருஷ்ணா, ஆகிய சாதனைப் படைத்த மாணவிகளுக்கு தங்க நாண யங்கள் பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டனர். (ந.நி.)