சின்னாளப்பட்டி,டிச.15- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தாடிக் கொம்பு அடுத்துள்ளது அய் யம்பாளையம் கிராமம்.இந்த கிராமம் தாடிக்கொம்பு லிருந்து வேடசந்தூர் செல் லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையின் வழி யாக 50 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணிக்கின்ற னர். அய்யம்பாளையத்திற் கும் சிக்கைய கவுண்டனூ ருக்கும் இடையே சந்தன வர்த்தினி ஆற்றில் தரைப் பாலம் உள்ளது. இந்தத் தரைப்பாலம் சேதமடைந்து 17 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டு விட்டது. இந்த கிராமங்களை சுற்றியுள்ள பல்வேறு கிரா மங்களின் பள்ளி மாண வர்கள் தாடிக்கொம்பிலுள்ள அரசு பள்ளியில் தான் பயின்று வருகின்றனர். மாணவர் களின் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமாக இந்த தலைப்பாலம் அமைந்திருந் தது. இந்நிலையில் திண்டுக் கல் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வந்த கனமழையால் சந்தன வர்த்தினி ஆற்றில் டிசம்பர் 14 அன்று அதிகாலை திடீர் வெள்ளம் ஏற்பட்டு தரைப் பாலம் மூழ்கியது. இதனால் அய்யம் பாளையம், மூக்கைய கவுண் டனூர், சிக்கைய கவுண்ட னூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக் கான போக்குவரத்து துண் டிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவி யர்கள் பள்ளிக்கு செல்ல முடி யாத சூழ்நிலை ஏற்பட்டுள ளது. அரையாண்டு தேர்வு துவங்கவுள்ள நிலையில் தரைப்பாலம் மூழ்கி போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ள தால் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசு அதி காரிகளிடம் தகவல் தெரி வித்தும் தற்போது வரை எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உட னடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.