திண்டுக்கல், மே 8- பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 93.77 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னி ரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 9, 689 மாணவர்கள், 11,113 மாணவிகள் என மொத்தம் 20,802 பேர் எழுதினர். இதில் 8,840 மாணவர்கள், 10,665 மாணவிகள், என மொத்தம் 19,505 பேர் தேர்ச்சி பெற்ற னர். மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 93.77. 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி திண்டுக்கல் மாவட்டத்தில் 100 விழுக் காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 67 ஆகும். மாணவி எஸ்.நந்தினி 600க்கு 600 மதிப் பெண் பெற்றுள்ளார். ஆனால் மாநில அள வில் தேர்ச்சி விகிதத்தில் திண்டுக்கல் மாவட்டம் 21-ஆவது இடத்தில்தான் உள்ளது. ஆட்சியர் விசாகன் பாராட்டு மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற எஸ்.நந்தினிக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் புத்தகம் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். நிகழ்வின் போது நந்தினியின் பெற்றோர், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி ஆட்சியர் பிரி யங்கா, முதன்மைக் கல்விஅலுவலர் நசு ரூதீன், பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்த னர்.