அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் கடைப்பிடித்த உத்தியை மோடி கடைப்பிடிக்கிறார் என்றார் அரசியல் செயற்பாட்டாளர் மருதையன்.
அரசியல் சட்டம்தான் எனக்கு கீதை, பைபிள், குரான் என்றெல்லாம் பேச வேண்டிய கட்டாயத்திற்கு மோடி ஆளாகி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக்கின் நிழல் வடிவம் என்று பொய் பேசுகிறார். நவராத்திரி காலத்தில் தேஜஸ்வியாதவ், மீன் சாப்பிட்டார் என்பதையெல்லாம் பிரச்சாரமாகப் பேசுகிறார். மோடியின் சமீபத்திய இத்தகைய பேச்சு, அவர்களது பின்னடைவை, தோல்வியை முன்கூட்டியே அறிவிப்பதாக உள்ளது.
வாய் திறக்க மறுக்கும் தேர்தல் ஆணையர்கள்
இது முழுக்க முழுக்க தில்லுமுல்லு செய்யப் பட்ட, அறிவிக்கப்படா அவசர நிலையின் கீழ் நடத்தப்படுகிற தேர்தல். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தேர்தல் ஆணையர்கள் நிய மிக்கப்படுகின்றனர். மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் பற்றிய சந்தேகத்திற்கு தேர்தல் ஆணை யர்கள் வாய்திறக்க மறுக்கிறார்கள்.
களத்தில் உள்ள எதிரிகளை கை, கால் களைக் கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து, கண்களை இறுகக்கட்டிவிட்டு மோடி சண்டைக்கு அழைக்கிறார். இவ்வளவு கோழைத்தனமாக தேர்தலை நடத்துவதற்குக் காரணம், தோற்றுவிடுவோம் என்று அவர் களுக்கு இருக்கும் அச்சம்.
குஜராத்தில் அமித்ஷா உள்துறை இணை யமைச்சராக இருந்த போது, உயர் போலீஸ் அதி காரிகளை வைத்து மிரட்டி பணம் பறித்த வாக்கு மூலங்கள் இருக்கின்றன. வழக்குகள் இருக் கின்றன. மர்மமான பல கொலைகளைச் செய்த இந்தக் கூட்டம், தற்பொழுது ஒன்றிய அரசில் உட்கார்ந்து கொண்டு சட்டப்படி செய்கின்றனர்.
வேலை வாய்ப்பை அழிப்பதே அரசின் திட்டம்
20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட 40 விழுக் காட்டினர் வேலையற்றவர்களாக இருக்கின்ற னர். ஆனால் ஒரு விழுக்காட்டினரிடம் 40 விழுக் காடு சொத்து இருக்கிறது. இவர்கள் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு ஏன் வேலை கொடுக்க வில்லை என்ற கேள்வியே தவறானது. வேலை வாய்ப்பை அழிப்பதுதான் இந்த அரசின் திட்டம்.
ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன், வேலை யின்மையை ஒழிப்பது சாத்தியமில்லை என்கி றார். சலுகைகள் வழங்கினால் உழைப்பதற் கான ஆர்வத்தைக் குறைக்கும் என்கிறார். நலத் திட்ட உதவிகள் இல்லையென்றால் இன்னும் அடிமாட்டு விலைக்கு கூலிக்கு ஆள்கிடைக்கும் என்பதுதான் இதன்பொருள். இன்னொரு பொருளாதார ஆலோசகர் சமத்துவம் பற்றி யெல்லாம் ரொம்ப கவலைப்படாதீங்க என்கிறார். இந்த திசையில் நாட்டை கொண்டு செல்வதுதான் அவர்களின் திட்டம்.
அமெரிக்க தேர்தலில் நான் வெற்றிபெறப் போவது உறுதி. ஆனால், எனது வெற்றியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார் டிரம்ப். மேலும், எனது ஆதரவாளர்கள் தயாராக இருங்கள் என்றார். தபால் வாக்குகளை முடக் கப்பார்த்தார். சில மாகாணங்களில் தனக்கு வேண்டிய அதிகாரிகளை வைத்து தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க நிர்பந்தப்படுத்தினார். அனைத்தையும் மீறி பைடன் வெற்றிபெற்று விட்டார். ஆனால், டிரம்ப் கூறியதை ஏற்று ஆயிரக்கணக்கானோர் வெறிகொண்டு வன்முறையில் இறங்கினர்.
யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நான்தான் ஆளுவேன்...
டிரம்ப் கடைப்பிடித்த பாசிச உத்தியை மோடி கடைப்பிடித்து வருகிறார். ஏதோ நடக்காததை சொல்வதாக நினைக்க வேண்டாம். எத்தனை மாநிலங்களில் எதிர்க்கட்சியில் வெற்றிபெற்ற எம்எல்ஏ-க்களை கூண்டோடு விலை பேசி இருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் எதிர்க்கட்சி தேர்தலில் நின்று வெற்றிபெற்று ஆள்வ தைக்கூட இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நீ யாருக்கு ஓட்டுப் போட்டா லும் நான்தான் ஆளுவேன் என்பதைத்தான் அவர்கள் நடத்திக் காட்டி வருகின்றனர்.
இவை அனைத்தையும் இந்தத் தேர்தலில் நாம் எதிர்கொள்ள வேண்டும். அரசியல் கட்சி யினரைப் போல எழுத்தாளர்களும், கலை ஞர்களும் இந்தத் தேர்தலில் பணியாற்ற வேண் டும். உங்கள் தெருவில், உங்கள் ஊரில் நண்பர் களிடம், உறவினர்களிடம் இந்த ஆட்சி நீடித்தால் எவ்வளவு பெரிய அபாயம் என்பதை உணர்த்த வேண்டும். அந்தந்தத் தொகுதியில் உள்ள ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இந்தியாவைக் காக்க தமிழ்நாடு ஒரே மனிதனாக எழுந்து நிற்க வேண்டும் என் றார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன்
பாஜக ஆட்சியில் ஏராளமான அறிஞர்கள், எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும். கடந்த நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் ஆற்றியுள்ள பணிகள் மகத்தானது. அவர் நாடாளுமன்றத்தில் தயார் செய்து ஆற்றிய உரைகள் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
தமிழ்மொழிக்கு எந்த இடத்தில் இடர்வந்தாலும் முதலில் குரல் கொடுப்பவராக சு.வெங்கடேசன் இருந்திருக்கிறார். அவர் மதுரை மண்ணோடும், மக்களோடும் கலந்து இருக்கிறார். 14 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றி இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை பொது விவாதமாக மாற்றி இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை நூறு விழுக்காடு முறையாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
உலகிலேயே அதிகமாக பெண்கள் மீது தாக்குதல்
எழுத்தாளர் சல்மா
இந்த நாட்டின் அத்தனை அடையாளங்களையும் பாஜக அரசு அழித்துக் கொண்டிருக்கிறது. பெண்கள் மீது இந்தளவுக்கு தாக்குதல் நடக்கும் நாடு உலகத்தில் வேறு எங்கும் இல்லை.
மக்களை சாதி, மத ரீதியாக பிரித்து ஆட்சிசெய்யும் உத்தியைக் கையாண்டு வருகின்றனர். ஜனநாயகத்திற்கான குரலை உயர்த்துபவர்கள் மிகப்பெரிய தாக்கு தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மனித உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படு கின்றன. கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் வேகமாகப் பரப்பப்படு கின்றன.
பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்க அமைச்சர்களே களமிறங்குகின்றனர். இத்தகைய நயவஞ்சகர்களை இந்தத் தேர்தலில் ஓட ஓட விரட்ட வேண்டும். சு.வெங்க டேசன் போன்ற ஆளுமைகள் மீண்டும் மக்களவைக்கு அனுப்ப வேண்டிய கடமை மதுரை மக்களுக்கு உள்ளது.
‘இந்தியா’ கூட்டணியில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்துமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கலை மாலை விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமுஎகச மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். விழாவில் திரைப்பட இயக்குநர் கோபிநயினார், தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டியதன் அவசியம் குறித்தும், மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் வெற்றிபெற வேண்டியதன் தேவை குறித்தும் விளக்கி உரையாற்றினர். பொருளாளர் சைதை ஜெ சமத் துவ உறுதிமொழி வாசித்தார். துணைப் பொதுச் செயலாளர்கள் களப்பிரன், லட்சுமிகாந்தன், வெண்புறா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் சென்னை கலைக்குழு, கார்மேகம் கலைக்குழுவின் நாட கங்களும், புதுகை பூபாளம் குழுவினரின் அரசியல் கச்சேரியும், பாப்பம்பாடி ஜமா, ஆண்டியாபுரம் தேவராட்டக்குழு, மதுரை மலைச்சாமி கரகாட்டம் உள்ளிட்ட ஆட்டக் கலையும், கரிசல்குயில் கிருஷ்ணசாமி, உடுமலை துரையரசன், தண்டபாணி, கவின்மலர், காம்ரேட் கேங்ஸ்டா ஆகியோரின் விழிப்புணர்வுப் பாடல்களும் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான எழுத்தாளர்களும், கலைஞர்களும் பங்கேற்றனர்.