விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்த சித்தாந்தவாதிகளின் வழிவந்த வர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என இந்திய தேசிய லீக் தென்மண்டல அமைப்பு செயலாளர் என்.அம்ஜத்கான் தெரிவித்துள் ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘சதா சர்வகாலமும் சனா தனக் கருத்தைப் பேசி, சர்ச்சை செய்வதே ஆளுநர் ரவிக்கு வாடிக்கையாகி போனது. கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பத் தின் மூலம் தமிழே என்பதை கண்டறிந்து, சமஸ்கிருதத்தின் வேரிலிருந்து அது முற்றி லும் வேறுபட்டதென்றும், சமஸ்கிருதத்தின் உறவின்றியே அது தனித்தியங்கும் வல் லமை கொண்டதென்று என்பதை நிறுவிய தால் கால்டுவெல் மீது ஆளுநர் ரவி தனது வன்மத்தை கக்கியுள்ளார்.
மேலும் சுதந்திர போராட்ட வீரர் சங்க ரய்யா அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் மதுரை காமராசர் பல்க லைக்கழக ஆட்சிமன்றக் குழு தீர்மான கோப்பில் கையெழுத்திட மறுத்துள்ளார். விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் வழிவந்தவர்கள் இப்படி செய்வதில் வியப்பேதுமில்லை. மருது சகோதரர்களின் வீரத்தளபதி யாக திகழ்ந்தவர் சேக் உசேன். மருது வின் மகன் துரைச்சாமியோடு நாடுகடத் தப்பட்டு இறுதிவரை ஆங்கிலேயரிடம் மண்டியிடாத மாவீரன். ஆனால், ஆளு நர் ரவியோ ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை போராட் டத்தை காட்டிக்கொடுத்த சித்தாந்தவாதி களின் வழிவந்தவர். இவர் சுதந்திர போராட்டம் குறித்து பேசுவது நகைச்சுவை யாக உள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.