கடமலைக்குண்டு, பிப்.27- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப் பகுதியை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. அதன்பின்னர் வனத்துறையினர் வனப்பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம பொது மக்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தனர். கடந்த ஆண்டு தொட ரப்பட்ட பொதுநல வழக்கில் வனப்பகு தியில் வசித்து வரும் மலைக்கிராம பொதுமக்கள் அனைவரையும் வனப் பகுதியில் இருந்து வெளியேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கள் உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து மலைக்கிராம பொதுமக்கள் அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள் ளது. நீதிமன்ற உத்தரவு வந்த பின்னர் மலைக்கிராம பொதுமக்களை வெளி யேற்ற வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன் ஒருபகுதியாக மலைக்கிராம பொதுமக்கள் விவசா யத்தில் ஈடுபட வனத்துறையினர் உத்த ரவிட்டனர்.
மேலும் வருசநாடு அருகே அமைந் துள்ள மஞ்சனூத்து சோதனைசாவடி யில் மலைக்கிராம பொதுமக்களை தவிர்த்து உரிய அனுமதி இல்லா மல் வெளி ஆட்களை அனுமதிப்ப தில்லை. இந்த நிலையில் தற்போது இலவம் பஞ்சு சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கோரையூத்து உள்ளிட்ட கிரா மங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வெள்ளி மலைக்கு செல்லும் அரசு பேருந்தில் சென்றனர். அப்போது சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த வனக் காவலர் செல்லத்துரை முறையான அனுமதி இல்லாமல் கூலி வேலைக் காக வனப்பகுதிக்குள் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். அப்போது பேருந்தில் வந்தவர்களுக்கும் வனக் காவலருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அனுமதி மறுத்ததால் பேருந்தில் வந்தவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். அப்போது அங்கு வந்த சிலர் வனக் காவலர் செல்லத்துரையை தாக்கி விட்டு அவரது செல்போனை பிடிங்கி உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு சென்ற மயிலாடும்பாறை, வருச நாடு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்பும் பேச்சு வார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் ஆண்டிபட்டி டி.எஸ்.பி. தங்ககிருஷ்ணன், கட மலைக்குண்டு காவல் ஆய்வாளர் கும ரேசன், சார்பு ஆய்வாளர் அருண் பாண்டியன், மேகமலை வனச்சரகர் சதீஸ்கண்ணன், வருசநாடு வனச்சர கர் ஆறுமுகம் ஆகியோர் மஞ்சனூத்து சோதனை சாவடிக்கு சென்றனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் பிரச்சனை தொடர்பாக வனத்துறையினருடன் மேகமலை ஊராட்சி மன்ற தலை வர் பால்கண்ணன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் போஸ் மற்றும் சிலர் மயி லாடும்பாறை போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் டி.எஸ்.பி தலைமை யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் வழக்கம் போல கூலி வேலைகளுக்கு சென்று வர வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் இருந்து விளை பொருட்களை ஏற்றி வர வெளியூர் வாகனங்களுக்கு அனு மதி வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து மேகமலை வனச்சரகர், நீதிமன்ற தீர்ப்பு அமலில் உள்ளது. இருப்பினும் வாழ்வாதா ரத்திற்காக மலைக்கிராம பொது மக்கள் அவரவர் நிலங்களிலிருந்து வாகனங்கள் மூலம் விளை பொருட் களை எடுத்து செல்ல அனுமதி வழங் கப்பட்டுள்ளது. ஆனால் லாப நோக் கத்திற்காக வெளியூர்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் வனப்பகு திக்குள் சென்று விளை பொருட்களை எடுத்து வரக்கூடாது என தெரிவித் தார். இதிலும் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை யை வரும் 5ஆம் தேதிக்கு காவல் துறையினர் ஒத்திவைத்தனர். இதற்கிடையே சோதனைச்சாவ டியில் தாக்கப்பட்ட வனக்காவலர் செல்லதுரை தேனி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளார். மேலும் செல்லத் துரை தாக்கியதாக கோரையூத்து கிராமத்தை சேர்ந்த பெண்கள் 3 பேர் அதே மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 தரப்பில் இருந்தும் மயிலாடும்பாறை காவல்துறையினரிடம் புகார் மனுக் கள் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.