districts

img

ஒன்றியம் கோபால்பட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

பெண்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பாப்பாத்தி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ராணி கண்டன உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் வனஜா, மாவட்ட தலைவர் சுமதி, ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, பொருளாளர் பழனியம்மாள், மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.