districts

img

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து அருப்புக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை, மே 30- சிறுபான்மை மக்கள் மீது இந்  துத்துவா சக்திகள் தொடர்ந்து தாக்கு தல் நடத்தி வருகின்றன. இதனைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்  குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து தலை மை வகித்தார். துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் எஸ்.கே.ராஜேந்தி ரன் பேசினார். போராட்டத்தை ஆத ரித்து சி.எஸ்.ஐ சபை பாதிரியார் ரஞ்சன்  கனகமணி, அருட்திரு.பிரகாசம், வாழ வந்தாள்புரம் ஜமாத் தலைவர் காஜா நஜ்முதீன், ம.ம.க மாவட்டத் தலைவர் மதார்கான், எஸ்.டி.பி.ஐ சார்பில் முஹம்மது அலி, பெந்தேகோஸ்தே சபையின் ராஜசிங், பாதிரியார் பாஸ்கர், செயலாளர் சார்லஸ், திமுக  நகர்மன்ற உறுப்பினர் டுவிங்ளின் பிரபா, காங்கிரஸ் கட்சியின் லட்சும ணன், சிபிஐ சார்பில் இளங்கோ, திமுக  சார்பில் ஜான்சன் ஆகியோர் பேசி னர். முடிவில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில செயலாளர் எம். தாமஸ்சேவியர் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.அன்புச்செல்வன், தமிழ்செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.