districts

img

அன்புஜோதி ஆசிரமத்தில் பெண்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் பெண்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி,நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தாலுகா தலைவர்  என். சுதா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ். மீனா, மாவட்டச் செயலாளர் பி.சித்ரா , மாவட்ட நிர்வாகிகள் எஸ். வெண்மணி, கே. கோமதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.