சிவகங்கை, மே 30- மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நாடாளு மன்ற உறுப்பினரும் மல் யுத்த சம்மேளனத்தின் தலை வருமான பிரிஜ் பூஷன் ஷரண்சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டர மாணிக்கம், மானாமதுரை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கண்டரமாணிக்கத்தில் விவசாயத்தொழிலாளர் சங் கத்தின் ஒன்றிய செயலாளர் பாலு தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மோகன் , மாதர் சங்க ஒன்றிய தலைவர் லட்சுமி, வாலிபர் சங்க ஒன் றிய செயலாளர் சேவகப் பெருமாள் ஆகியோர் பேசி னர். மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பர மாத்மா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வீர பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன் றியச் செயலாளர் ஆண்டி ஆகியோர் பேசினர்.