தூத்துக்குடி, நவ.18- நீதிமன்ற உத்தரவை மீறி பணி உயர்வு வழங்குவதில் மூத்தோர்களைப் புறக்க ணித்து பதவி உயர்வை தவ றாக திருத்தம் செய்து வெளி யிட்ட பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தின் நிலைப்பாட்டைக் கண்டித் தும், நீதிமன்ற உத்தரவுப் படி பட்டியலில் திருத்தம் செய்யும் முன்பு தற்சமயம் பணியில் உள்ள அனைவ ரிடமும் விருப்பக் கடிதத்தை பணியமைப்பு விதிகளின்படி பெறாத பாரபட்சத்தைக் கண்டித்தும் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவ லகம் முன்பு பொதுச் சுகாதா ரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மதுரம் பிரைட்டன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலா ளர் வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் முருகன், ஓட்டப் பிடாரம் வட்டச் செயலாளர் திருமலை, தூத்துக்குடி வட்டச் செயலாளர் தவமணி, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் மந்திரமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.