பழனி, மார்ச் 15- திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பழனி யாண்டவர் கோவில் நிர்வா கத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறி விப்பு கடந்த 01.03.23 அன்று வெளியிட்டனர். இந்த அறி விப்பில் எந்தவொரு இடத்தி லும் மாற்றுத் திறனாளிகளுக் கான வேலைவாய்ப்பு பற் றிய அறிவிப்பை வெளியிட வில்லை. இது மாற்றுத்திற னாளிகள் சட்டத்திற்கு விரோ தமான செயலாகும். எனவே, பழனி தேவஸ் தான நிர்வாகத்தின் சார்பில் வெளியாகியுள்ள இந்த வேலைவாய்ப்பு பற்றிய அறி விப்பை உடனடியாக திரும் பப்பெற்று மாற்றுத்திறனாளி களையும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பு பற்றிய அறி விப்பை வெளியிட வலியுறுத்தி மார்ச் 14 செவ்வாய்க்கிழமை யன்று பழனி தேவஸ்தான தலைமை அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு பழனி ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பகத்சிங், மாவட்டத் தலை வர் ஜெயந்தி ஆகியோர் உரையாற்றினர். ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பாலக்குமார், பழனி நகர பொருளாளர் அய் யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.