districts

img

சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் பிரதமரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை/பழனி, ஜன.9- மௌலானா ஆசாத் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தி வைத்துச் சிறுபான்மை மாணவர்களின் உயர்கல் விக் கனவை நசுக்கும் மோடி அரசைக் கண்டித்து இந்திய  மாணவர் சங்கம் சார்பில் திங் களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாந கர் மாவட்டச் செயலாளர் க. பாலமுருகன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மத்தியக்குழு உறுப்  பினர் க.பிருந்தா, மாநிலத்  தலைவர் கோ.அரவிந்த சாமி, வேல்பிரகாஷ், டேவிட், ராகுல், அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழனி பழனியில் உள்ள பழனி யாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி அரு கில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் முகேஷ், தீபக், மது மிதா, லெனின்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.