இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை செப்.27-ம் தேதி வரை காவல்
இராமேஸ்வரம், செப்.14- எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரே நாளில் இராமேஸ்வரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட் டங்களை 17 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து புதனன்று 300-க்கும் மேற்பட்ட விசைப் படகு களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில், கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, 5 ரோந்து கப் பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், இராமேஸ் வரம் அட்டமால் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவ ரது விசைப்படகை சிறைபிடித்தனர். மேலும் படகில் இருந்த ராயப்பன் (36), அந்தோணி லியோன் (38), முனியாண்டி (50), அந்தோணிசாமி (46), இருதயராஜ் (18), கிறிஸ்டின் (41), சுப்பிரமணி (52), மெல்ரான் (16) ஆகிய 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து காங்கேசம் துறைமுகத் திற்கு அழைத்து சென்றனர். இதேபோன்று புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்து 2 விசைப்படகுகள் மற்றும் 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்தநிலையில், மீனவர்கள் அனைவரும் ஊர் காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் செப்.27 வரை மீனவர்கள் காவலில் வைக்கப்பட உள்ள னர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை விடு தலை செய்திட ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
மதுரை, செப்.14- மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல 45 வது வார்டுக்கு உட்பட்ட கீழ் மதுரை காலனி அன்னை தமிழர் குடியிருப்பு மற்றும் சின்ன கண்மாய் தெரு பகுதி யில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சுகாதார சீர்கேட் டின் பிடியில் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை மாநகராட்சி நிர்வாகத்தில் மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கும் தொற்று நோய் பர வும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில் வியா ழனன்று மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலு வலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
மதுரையில் அதிகரிக்கும் டெங்கு, மஞ்சள் காமாலை பரவலை தடுக்க கோரிக்கை
மதுரை, செப்.14- மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பலருக்கும் பரவி வருகின்றது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை டெங்குவால் 11 குழந்தைகள் உள்பட 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீனாம்பாள்புரம், கூடல்நகர், மேலப்பொன்னகரம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் காமாலையாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி பகுதியில் மட்டும் 50 பேர் காய்ச்சலுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, டெங்கு, மஞ்சள் காமாலை நோய் பரவா மல் இருக்க மாநகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உறவினர்களின் வீடுகளில் கார், சரக்கு வாகனங்கள் எரிப்பு
மதுரை, செப்.14- மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவ னூர் கிராமத்தில் அதிமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பி னரான பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கோவில் மரியாதை அளிப்பதில் பொன் னம்பலம் தரப்பினருக்கும், கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பொன்னம்பலத்தின் வீடு அடித்து நொறுக்கப்பட்டு கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. இது தொடர்பாக சத்திரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பொன்னம்பலத்தின் தரப்பினர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் வேல்முருகன் தரப்பினருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கருவனூர் கிராமத்தில் புதனன்று இரவு அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலத்தின் உறவினர்களாக பிரபு, வேலுமணி ஆகியோரின் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், சரக்கு வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது.
சிவகங்கைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் கடையடைப்பு போராட்டம்
சிவகங்கை செப்.14- சிவகங்கை ரயில் நிலை யத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தியும் கூடு தல் ரயில்களை இயக்க கோரியும் இந்தியா கூட்ட மைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை நகரில் ‘இந் தியா’ கூட்டணி, அனைத்து பொது நல அமைப்புகள் சார் பில் அவசர ஆலோசனை கூட்டம் நகர் மன்றத் தலை வர் துரை ஆனந்த் தலைமை யில் நடைபெற்றது. இதில், சிவகங்கையில் உள்ள ரயில் நிலையம் வழி யாக நாள்தோறும் 22 ரயில் கள் வந்து செல்கின்றன. இதில் நிற்காமல் செல்லும் 8 ரயில்களை நின்று செல்ல வலியுறுத்தியும், சென்னை யிலிருந்து காரைக்குடி வரை வந்து செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை சிவ கங்கை மார்க்கமாக மானா மதுரை வரை நீட்டிக்க வலி யுறுத்தியும், பகல் நேரத்தில் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு புதிதாக ரயில் விட வலியுறுத்தியும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தங்களது கோரிக் கையை வலியுறுத்தி, மதுரை மண்டல ரயில்வே அதிகாரி களுக்கு மனு அளிப்பது, நாடாளுமன்ற உறுப்பி னர்களுடன், ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே போர்டு உறுப்பினர்களை சந்தித்து முறையிடுவது, முதல்வரை சந்தித்து கோரிக் கையை வலியுறுத்தி அழுத் தம் கொடுப்பது, மேலும் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்து வது என முடிவெடுக்கப்பட் டது.
மன்னார்குடி-மானாமதுரை ரயிலை மீண்டும் இயக்க சிபிஎம் கோரிக்கை
சிவகங்கை, செப்.14- மானாமதுரை-மன்னார்குடிக்கு காரைக்குடி வழியாக இயக்கப்பட்டு வந்த ரயிலை மீண்டும் இயக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரயில்வே நிர்வா கத்திற்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் கருப்புசாமி கூறுகையில், ‘‘மன்னார்குடியிலிருந்து காரைக்குடி வழியாக மானாமதுரைக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது ரயில்வே நிர்வாகம் மன்னார்குடி- மானா மதுரை ரயிலை மானாமதுரை வரை செல்வதையும், மானா மதுரையிலிருந்து மன்னார்குடிக்கு புறப்படுவதும் நிறுத்தப் பட்டது. எனவே, மன்னார்குடி-மானாமதுரை ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்’’ என்றார். ஆட்டோ சங்கத்தின் பொறுப்பாளர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘கடந்த ஒரு வாரமாக மன்னார்குடி- மானா மதுரை ரயிலை காரைக்குடி வரை மட்டுமே இயக்கு கின்றனர். பயணிகளுக்கு மானாமதுரை வரை டிக்கெட் கொடுத்து காரைக்குடியோடு இறக்கி விடுவதால் மக்கள் பொருளாதாரத்தையும் இழந்து அவதிப்பட்டனர். இன்றைய தினம் மானாமதுரை வரை டிக்கெட் கொடுத்துவிட்டு காரைக்குடியோடு இறக்கியதால் காரைக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் டிக்கெட் கட்ட ணத்தை திரும்ப கேட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன் கருதி மன்னார்குடி-மானாமதுரை ரயிலை இயக்க வேண்டும்’’ என்றார்.
மீனாட்சி கல்லூரி விடுதிக்கு சமையலர் இல்லை: மாணவிகளுக்கு மூன்று நாள் விடுப்பு
மதுரை, செப்.14- மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இந்த கல் லூரியில் சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் வெளியூரிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு கல் லூரி நிர்வாகம் சார்பில் கட்டண அடிப்படை யில் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே 2 விடுதி கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விடுதி சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் விடுதியில் வழங்கப்படும் உணவுகளில் புழுக்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சி யருக்கு சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா, விடுதி முழுவதும் ஆய்வு செய்து, விடுதியில் பணியாற்றிய ஆண் சமைய லர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால், மாணவிகளுக்கு சமைப்ப தற்கு சமையலர்கள் இல்லாமல் கடந்த 3 தினங்களாக மாணவிகளே சமைத்து உண்டு வந்தனர். இந்நிலையில், செப்டம்பர் 19 வரை மாணவிகளுக்கு விடுப்பு வழங்கி கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் விரைவில் சமையலர் நியமனம் செய்த பிறகு விடுதிக்கு வரலாம் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கல்லூரி மாணவி தற்கொலை
தேனி, செப்.14- காதலித்ததால் இரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட தக ராறில் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி விஸ்வதாஸ் காலனியை சேர்ந்த ஜெயக் குமார் மகள் காஞ்சனா (17). இவர் பெரியகுளத்தில் உள்ள திரவியம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த முத்துமாணிக் கம் என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி காஞ்சனா சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 8 பேர் மீது வழக்கு
சிவகாசி, செப்.14- சிவகாசி உசேன் காலனியை சேர்ந்தவர் தெய்வ மணி, பட்டதாரி ஆசிரியர். இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் மகாராஜா நகரில் நிலம் வாங்கினார். இந்த நிலையில் மகளின் படிப்பு செலவிற்காக வங்கி யில் நில பத்திரத்தை அடமானம் வைக்க சென்றுள்ளார். பின்பு, இடத்திற்கான வில்லங்க சான்றிதழை சரி பார்த்துள்ளார். அப்போது, தெய்வமணிக்கு சொந்தமான நிலம், கடந்த ஆண்டு தனலட்சுமி என்பவரிடம் இருந்து அவரது கணவர் செந்தில்குமாருக்கு விற்கப்பட்டதாக வும், பின்னர் அதனை அவர் மாரிக்கனி, முத்துலட்சுமி ஆகி யோருக்கு விற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த நிலப் பத்திரத்தை வைத்து தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் கடன் வாங்கியிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தெய்வமணி இது குறித்து விசாரித்தபோது, தனலட்சுமி மகள் என போலி ஆவணத்தை தயார் செய்துள்ளார். மேலும் தெய்வமணி இறந்ததாக கூறி போலி சான்றித ழையும் தயார் செய்து அதன் மூலம் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக பத்திர எழுத்தர் வைரமுத்து, சிவகாசி சார்பதிவாளர் உள்பட 8 பேர் இருந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் காவல்துறையினர் 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வளர்ச்சி குன்றிய மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் கைது
சிவகாசி, செப்.14- சிவகாசி அருகே உள்ளது அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு மனவளர்ச்சி குன்றிய மாணவ, மாணவிகள் 104 பேர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு 35 ஆசிரி யர்கள் மூலம் பயிற்சிகள் மற்றும் கல்வி கற்றுத்தரப் பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் மாணவ, மாணவி கள் தங்கியுள்ளனர். இந்தநிலையில், அப்பள்ளியில் உள்ள கழிவறை களை 3 மாணவர்கள் சுத்தம் செய்வது போன்ற காணொ லிக் காட்சிகள் வைரலாகின. இதையடுத்து, அப்பள்ளி யில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் அங்கு விசாரணை மேற்கொண்டனர். பின்பு, விசாரணை அறிக் கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவதாக தெரிவித்தனர். பின்பு, பள்ளிக்கு வந்த சிவகாசி துணை காவல் கண்கா ணிப்பாளர் அங்குள்ள ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவி களிடம் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்த விசாரணையில், அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் இமானுவேல் என்பவர் தனக்கு தலைமை ஆசிரியர் பதவி கிடைக்காத காரணத்தால், 3 மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, அதை செல்போன் மூலம் வீடியோ எடுத்து வலை தளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆசிரியர் இமானுவேலை சிவகாசி நகர் காவல்துறை யினர் கைது செய்தனர்.
மின் கோபுரம் அமைக்கும் பணி: விவசாயிகள் புகார்
திண்டுக்கல், செப்.14- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்ட வீரக்கல் பகுதியில் உள்ள குறு விவசாயிகள் புதினா, மல்லி, வாழை, பூ வகைகள் உள்ளிட்ட பயிர்கள் விவ சாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், விவசாய நிலத்தில் மின்சார வாரி யத்தின் மூலமாக மின் கோபுரம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. மின் கோபுரம் அமைக்கும் பணியின் போது விவசாயிகளின் நிலத்திற்கு உரிய தொகை தரா மல் பணி நடைபெற்றதால் விவசாயிகள் அதிகாரிகளு டன் முறையிட்டு பணியை நிறுத்தினர். வீரக்கல் ஊராட்சியில் மட்டும் சுமார் 18 விவசாயி களுக்கு தலா ரூ.3 லட்சம் தருவதாக கூறி தற்போது வரை விவசாயிகளுக்கு எந்த பணமும் வழங்காமல் மின் கோபு ரம் அமைக்கும் பணியை செய்து வருவதாக கூறப்படு கிறது. இந்தநிலையில், விவசாயிகள் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு வேலையை செய்யு மாறு வேலைக்கு வந்த அதிகாரிகளிடம் முறை யிட்டனர். மேலும் இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்து தங்களை மிரட்டுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்ற னர். உடனடியாக தங்களுக்கு தர வேண்டிய பணத்தை வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கல்குவாரியில் வெடி விபத்து 2 பேர் பலி; இருவர் காயம்
திண்டுக்கல், செப்.14- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நல்ல மனார்கோட்டை அருகே உள்ள சுந்தரபுரி பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பணி யாற்றுகின்றனர். இந்நிலையில், கல்குவாரியில் வெடி வைப்பதற்காக நாராயணன், மேத்யூ மற்றும் சிலர் ஈடுபட்டனர். அப்போது திடீரென வெடி வெடித்ததில் மேத்யூ மற்றும் நாராயணன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இருவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.