districts

img

சோழவந்தான் அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல்

மதுரை பிப் 2-  மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கண்மாய் பாசனம் மூலமும், மோட்டார் பம்ப் வைத்தும் விளைவிக்கப்பட்ட நெல் அறுவடை செய் யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக களத்தில் நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.  நெல் கொள்முதல் நிலையம் திறக்க தாமதமாவதால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நெல் நனை ந்து முற்றிலும் சேதமாகி வருகிறது. இத னால் ஏராளமான  விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.  ஏற்கனவே விவசாயம் செய்வது சவாலான சூழ்நிலையாக மாறி வரும் காலத்தில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் காத்தி ருக்க வைப்பதால் தங்களின் வாழ்வாதா ரம் மிக மோசமான சூழ்நிலையில் உள்ள தாக இப்பகுதி விவசாயிகள் வேதனைய டைந்துள்ளனர்.