திருவில்லிபுத்தூர், நவ.5- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 32 ஆவது வார்டு பகுதியில் நகர சபை கூட்டம் நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மடவார்வளாகம், தன்யாநகர் பகுதி பொதுமக்கள் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். வார்டில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, மற்றும் சாலை வசதிகள் பிரதான குறைகளாக பதிவு செய்யப் பட்டது. குறிப்பாக திருவில்லிபுத்தூர் நகரில் இருந்து 500 குடியிருப்புகள் இருக்கும் தன்யா நகருக்கு செல்வ தற்கும் தன்யா நகரிலிருந்து திருவில்லிபுத்தூர் நகர்ப்பகு திக்கு செல்வதற்கும் ஒரே ஒரு பாதை வசதி மட்டுமே உள்ளது. தன்யா நகர் உட்படங்களில் ஒரு சில இடங்களில் 20 அடி ரோடு வசதியும் பல தெருக்களில் 16 அடி அகலம் கொண்ட ரோடு வசதியும் மட்டுமே உள்ளது. குறிப்பாக தன்யா நகர் உள்ளே நுழையும் சுமார் 50 அடி நீளமுள்ள பாதையில் அகலமானது 10 அடிக்கும் குறைவாக உள்ள தால் இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகையால் தன்யா நக ருக்கு இப்பாதையை தவிர்த்து வேறு ஒரு மாற்றுப் பாதை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.