சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
சிவகாசி, ஜன.24-- சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கனஞ் சான்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பேபி பட்டாசு ஆலை உள்ளது. இதில், கடந்த ஜனவரி 19 அன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில், முனீஸ்வரி,சங்கர் ஆகிய இரு தொழிலா ளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படு காயமடைந்த 16 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ராஜ்குமார், மாரிமுத்து, கருப்பசாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், மாரிமுத்து, கருப்ப சாமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இத னால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
வெடிவிபத்தில் மேலும் இருவர் பலி
சாத்தூர், ஜன.21- சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயம டைந்து சிகிச்சை பெற்று வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவசங்கு பட்டியில் குருநாதன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில், கடந்த ஜனவரி 14 அன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த ராம்பால்ஆஜி (25),சந்தீப்குமார்(24),வினோத் ராம்பால்(25)ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரும் மேல் சிகிச் சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராம்பால், சந்தீப்குமார் ஆகியோர் உயிரிழந்தனர். வினோத்ராம்பால் என்பவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு
தேனி, ஜன.21- போடி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மணி மனைவி லட்சுமி (48). இவரது தம்பி மனைவி தங்கம் என்பவரை இதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன்கள் ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோர் கிண்டல் செய்துள்ளனர். இதனை லட்சுமி தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன், கண்ணன் ஆகி யோர் சேர்ந்து லட்சுமியை கம்பால் தாக்கி, கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பலத்த காயமடைந்த லட்சுமி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அவர் கொடுத்த புகார் வாக்குமூலத்தின் அடிப்படை யில் போடி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோரை தேடி வரு கின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே ரூ.133.5 கோடியில் புறவழிச்சாலை பணி வருவாய்த்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்
அருப்புக்கோட்டை, ஜன.21- அருப்புக்கோட்டை அருகே ரூ.133.5 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை தமிழக வருவாய் - பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் கூறுகையில், இப்புறவழிச் சாலையானது 10 கி.மீ தூரமாகும். இதற்கென 35.25 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.35.4 கோடி நிலஎடுப்புக்கும் ரூ.98.58 கோடி சாலை பணிக்கும் பயன்படுத்தப்படவுள்ளது. இந்தச் சாலையானது, அருப்புக்கோட்டை- கோவிலாங்குளம் விலக்கில் ஆரம்பித்து, வலதுபுறம் பிரிந்து, திருவில்லிபுத்தூர்- பார்த்திபனூர் சாலையில் குறுக்கிட்டு, சுக்கிலநத்தத்தில் மீண்டும் குறுக்கிட்டு தேசிய நெடுஞ்சாலையில் இணைக் கப்படுகிறது. இதனால், விருதுநகர், இராஜபாளையம், தென்காசி யிலிருந்து இராமநாதபுரம் மற்றும் இராமேசுவரத்திற்கும், இராமேசுவரம், இராமநாதபுரத்திலிருந்து விருதுநகர், இராஜபாளையம், தென்காசிக்கும் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுள்ள மற்றும் குறுக லானஅருப்புக்கோட்டை நகர பகுதியினை தவிர்த்து விரைவில் பயணிக்கலாம். அதேபோல், அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் வாகன நெரிசலுள்ள நகர பகுதிகளை தவிர்த்து, மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு சிரமமின்றி பயணம் செய்யவும், பந்தல்குடியிலிருந்து விருதுநக ருக்கும், பாலையம்பட்டியிலிருந்து விருதுநகருக்கும் எளி தாக பயணிக்கலாம் என தெரிவித்தார். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண்கரெட் அருப்புக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சதுரகிரி கோவில் மலைப்பாதையில் நடந்து சென்றவர் பலி
திருவில்லிபுத்தூர், ஜன.21- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். கோவை மாவட்டம் கேகே.புதூர் சாய்பாபா காலனியை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவர் தனது நண்பர்களுடன் அதிகாலையில் மலைப்பாதை வழியாக சதுரகிரி கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். மலைப்பாதையில் உள்ள வனத்துர்க்கை கோவில் அருகே செல்லும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை டோலி மூலம் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்த மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பட்டாசு ஆலைகளை உள் குத்தகைக்கு விட்டால் உரிமம் நிரந்தரமாக ரத்து
விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை
விருதுநகர், ஜன.21- பட்டாசு ஆலைகளை உள் குத்த கைக்கு விட்டால் ஆலையின் உரிமம் நிரந்தர மாக ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித் துள்ளார். விருதுநகரில் பட்டாசு உற்பத்தி யின்போது ஏற்படும் வெடி விபத்துக் களைக் குறைப்பது மற்றும் விதிமுறை களுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்வது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலை உரிமையா ளர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது ஆட்சியர் கூறியதாவது: பட்டாசு ஆலைகள் உரிமதாரர்களால் மட் டுமே நடத்தப்பட வேண்டும். உரிமதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர் களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது. அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, உள்குத்தகை விடப்பட்டது கண்டறியப் படின், மேற்படி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது கடுமையான குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்மந்தப்பட்ட ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக இரத்து செய்யப்படும். ஆலை உரிமதாரர்கள் மற்றும் குத்தகை தாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரி மங்கள் பெறுவதிலிருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட மிகக் கடுமையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும் . மாவட்ட அளவிலான உயர் அலுவ லர்களால் பட்டாசு தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். உயர் அலுவலர்கள் மற்றும் சிறப்பு ஆய்வுக் குழுக்கள் ஆய்வு செய்யும்போது,
அதிக மான தொழிலாளர்கள், அதிகமாக வெடி பொருட்கள் இருப்பு வைத்தல், தயா ரித்தல் போன்ற மிகக் கடுமையான விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், பொது மக்க ளின் உயிர் மற்றும் உடைமைக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோ தமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் கருந்திரி உள்ளிட்ட இதர பட்டாசுகள் தயாரிப்பது கண்டறியப்பட் டால், அவர்கள் மீதும் மிகக் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து பட்டாசு தொழிற் சாலைகளில் பணிபுரியும், போர்மேன், மேலாளர் மற்றும் இரசாயனக் கலவைப் பணிகளில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு பயிற்சி மையத்தின் சார்பாக பயிற்சி வழங்கப் பட்டு வருகிறது. மேற்படி பயிற்சி நட வடிக்கைகளை முழுமைப்படுத்தும் நோக்கில், குறுகிய காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பயிற்சி கால அட்டவணை தயார் செய்யப்பட்டு, முன் கூட்டியே அறிவிப்பு செய்யப்படும். மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ளாத தொழிற்சாலைகளின் மீது உரிய விதி முறைகளின்படி கடுமையான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும். எனவே, ஆலை உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் தொழில் செய்து, விபத்தில்லா விருது நகரை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூ.8 லட்சம் மதிப்புள்ள கருந்திரி பறிமுதல்: 9 பேர் மீது வழக்கு
அருப்புக்கோட்டை, ஜன.21- அருப்புக்கோட்டையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் கருந்திரிகள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகர் காவல் சார்பு ஆய்வாளர்கள் தாம ரைக்கண்ணன், ஜோதி முத்து, நாகராஜ பிரபு , அசோக் குமார் தலைமையிலான போலீசார், தெற்குத் தெரு, எம்டிஆர் நகர், சொக்கலிங்கபுரம், மேட்டு தெரு, ஜோதி புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர் இதில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 8 லட்சம் மதிப்பிலான 52,500 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக லோகநாதன்(63), விஜயகுமார் (46), செல்வராஜ் (58), ராமசாமி (68), வீர ராஜன் (62), பாலமுருகன் (51), பாண்டிகணேசன் (55) , முருகேஸ்வரி (60) ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கட்டங்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்ட னர். அதில், கணேசன்(53) என்பவரின் வீட்டில் இருந்து 8 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்து அவர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.
மதுரையில் குட்கா கடத்தி வந்தவர்கள் கைது
மதுரை, ஜன.21- மதுரையில் தடை செய்த குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலைய உதவி ஆய்வா ளர் அன்புதாசன், பழங்காநத்தம் வ. உ. சி பாலத்தில் சனிக்கிழமையன்று வாகனச்சோதனை ஈடுபட்டிருந்தார். அப்போது காரில் வந்தவர்களை நிறுத்த முயற்சித்த போது அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், ஹார்விபட்டியை சேர்ந்த காசி விஸ்வநாதன், இலங்கையை சேர்ந்த சிவராஜ் என்பதும் இவர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 16.5 கிலோ மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் சிவராஜ் இலங்கை முல்லைத்தீவை சேர்ந்தவர் என்ப தும் கள்ளதோணியில் இராமேஸ்வரம் வந்து ராஜேஷ் என்ற பெயரில் திருப்பத்தூரை சேர்ந்த ஏஜென்ட் செல்வம் மூலம் சென்னையில் போலியான முகவரியில் டிரைவிங் லைசன்ஸ் பெற்று போலியான பாஸ்போர்ட் தயாரித்து துபாய் சென்றுள்ளார். பின்னர் இந்தியா வந்தபோது மேற்படி பாஸ்போர்டை தொலைத்து விடவே மீண்டும் போலியான பாஸ்போர்ட் தயாரிக்கும் நோக்கத்தில் துபாயில் நண்பர் மூலம் பழக்கமான காசி என்பவருடன் சேர்ந்து மதுரையில் வேறு ஒருவரின் முகவரியில் ஆதார் கார்டு பெற்று அதனை கொண்டு டிரைவிங் லைசன்ஸ் தயாரித்துள்ளார். மேலும் செலவிற்காக பெங்களூருவில் இருந்து தடைசெய்யப் பட்ட குட்காவை வாங்கி மதுரையில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. காசி விஸ்வநாதன் மற்றும் இலங்கையை சேர்ந்த சிவராஜ் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் 162 பேருக்கு செயற்கை கால் பொருத்த நடவடிக்கை தேனி ஆட்சியர் தகவல்
தேனி, ஜன.21- தேனி மாவட்டத்தில் 162 பேருக்கு செயற்கை கால் வழங்குவதற்கான அளவீடு செய்யப்பட்டுள்ளது , விரை வில் அவர்களுக்கு செயற்கை கால் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார் . தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் சென்னை பிரீடம் டிரஸ்ட் இணைந்து நடத்திய செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமினை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் துவக்கி வைத்து பார்வையிட்டார். செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகா மில் கலந்துகொண்டவர்களில் தகுதியான 162 நபர்களுக்கு செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டு செயற்கை கால்கள் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். இந்முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் ஸ்ரீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.