மதுரை, மார்ச் 30- மதுரை ஜெய்ஹிந்த்புரம் வெங்கடாசலபுரம் பகுதியில் டிவிஎஸ் நகர் ,பழங்காநத்தம் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் பகுதி இணைப்பு பாலப் பணி நடைபெற்று வருகிறது. இதில் வெங்கடாஜலபுரம் பகுதியில் பாலப் பணிகளுக் காக பள்ளம் தோண்டும் போது கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு தெருக்க ளில் தேங்கியது. இதை நெடுஞ்சாலைத்துறை கவ னத்திற்கு கொண்டு சென்றா லும் சரி செய்யாத போக்கு உள்ளது இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மூன்று முறை கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட தால் இப்பகுதி மக்கள் மாநக ராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்களிடம் சரி செய் திடுமாறு முறையிட்டனர். இதனைத்தொடர்ந்து மதுரை துணை மேயர் டி. நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா விமல் ஆகியோர் புதனன்று பார்வையிட்டு, பாலம் கட்டு மான பணியினை தற்காலிக மாக நிறுத்தி வைக்கச் சொல்லி, நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் கழிவு நீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் உடனடியாக சீர மைத்து கொடுக்க வேண் டும். அதற்குப்பின் பாலம் பணியினை தொடங்கிட வேண்டும் என்று தெரிவித்த னர். இதுபோன்ற பெரும் பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள் மற்றும் வாக னங்கள் செல்வதற்கு மாற்று பாதைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு மாற்றியமைக்க வேண்டும். இதை ஒப்பந்ததாரர்கள் பின் பற்றுவதில்லை. இதை மாந கராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. இத னால் தான் இது போன்ற பெரும் பணிகளின்போது பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுகிறது. எனவே இவைகளை ஒப்பந்ததாரர் கள் முறையாக பின்பற்று கிறார்களா என்பதை மாநக ராட்சி நிர்வாகம் கவனிக்க வேண்டும்.