districts

கட்சி மாறினால் வெட்டு தொண்டர்களை மிரட்டிய அதிமுக நிர்வாகி தப்பியோட்டம்

சாத்தூர், பிப்.6- கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன் என கூட்டத்தில் மிரட்டும் தொனியில் பேசி னார் சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முககனி. இந்தப் பேச்சு, சமூக வலை தளங்களில் பரவியது. இதையடுத்து, அவ ரைக் கைது செய்ய காவல்துறையினர் முயன்ற போது மாடியில் இருந்து குதித்தார்.  இதனால் காலில் முறிவு ஏற்பட்டது. எனவே, அவர், மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீரென தலைமறைவாகி விட்டார். எனவே, அவரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஜன வரி 28ம் தேதி தனியார் திருமண மண்ட பத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு ஒன்றிய செய லாளர் சண்முகக்கனி பேசினார். அப்போது, அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, கட்சி மாறிப் போனால் அவனை வீடு தேடி வெட்டுவேன், மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வெட்டு வேன், என் வெட்டு முதல் வெட்டாக இருக் கும், உங்கள் பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனையில்தான் இருக்கும் என  கட்சியினரை மிரட்டும் வகையில் பேசி யுள்ளார். இந்த காணொளிக் காட்சி, சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.

இதையடுத்து, சண்முகக்கனி மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகை யில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சாத்தூர் நகர் காவல்நிலை யத்தினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்பு, அவரைக் கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், சண்முகக்கனி, அவரது வீட்டில் பதுங்கி உள்ளதாக காவல்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. எனவே, காவல்துறையினர் அவரது வீட்டைச் சுற்றி வளைத்தனர். இதை அறிந்த சண்முகக்கனி, காவல்துறையினரிடம் இருந்த தப்பிக்க, வீட்டின் மாடியிலிருந்து குதித்துள்ளார். இதில் அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. எனவே, காவல்துறையினர் கோவில்பட்டி மருத்துவ மனையில் விசாரணை செய்தனர். அப்போது மருத்துவமனையிலிருந்து தலைமறைவா னது தெரியவந்தது. எனவே, தனிப்படை யினர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தேடி வருகின்றனர்.