விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் அனைந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மேற்கு ஒன்றியக் குழு சார்பில் சமயநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆர்.சரஸ்வதி தலைமை வகித்தார். புறநகர் மாவட்டத் தலைவர் எஸ்.மலர்விழி, மாவட்டச் செயலாளர் க. பிரேமலதா, மாவட்டக்குழு உறுப்பினர் இந்திரா தேவி ஆகியோர் பேசினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சித்ரா, ராணி, காளியம்மள் மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..