districts

img

குணப்பனேந்தலில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சிபிஎம் - கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை, ஜூன் 2 - சிவகங்கை மாவட்டம் இளையான்குடி குணப்ப னேந்தலில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிர மிப்பை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கிராம மக்கள் ஜூன் 2 வியாழனன்று போராட்டத்தில் 200 பெண்கள் உள்பட 500 பேர் பங்கேற்றனர். போராட்டத்தை தொடர்ந்து வட்டாட்சியர் அசோக் தலை மையில் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், மாவட்ட செயலாளர் தண்டியப்பன், ஒன்றிய செயலா ளர் ராஜு ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்து ராமலிங்க பூபதி, மோகன், ஆறுமுகம், ஜனநாயக மாதர் சங்க இளையான்குடி ஒன்றிய செயலாளர் ஜெயந்தி , சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா,  கிராம  மக்கள் சார்பாக ஆரோக்கியசாமி ,ஜோசப் ராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தை யில்  ஜூன் 15 க்கு முன்பு வருவாய் கோட்டாட்சியர் தணிக்கை செய்து புல தணிக்கை செய்து அவ்விடத்தில் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு இருக்கும்பட்சத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்று வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்று வட்டாட்சியர் உறுதி அளித்தார். மேற்படி இடத்தில் ஆக்கிரமிப்பு தொடர்பாக யாரேனும் நீதிமன்றம் சென்றால் ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் அதன் விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் வட்டாட்சியர் தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டது .அந்த உறுதியை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து  இரு தரப்பும் கையெழுத்திட்டு அந்த சமாதான ஒப்பந் தத்தை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.