districts

img

திருச்சுழி அருகே அரசுக் கல்லூரி கட்டிடப்பணிக்குச் சென்ற 2 மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி

திருச்சுழி, ஏப்.29- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் நடைபெற்று வரும் அரசுக் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட  இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சுழியிலிருந்து நரிக்குடி செல்லும் பகுதியில் உள்ளது  மேலேந்தல் கிராமம். இங்கு அரசு கலைக் கல்லூரி அமைக்க தமிழக அரசு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்துள் ளது. இப்பணியை கடல் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. கல்லூரி கட்டும் பணியானது,  கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில், சுற்று வட்டா ரப் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை வழக்கம் போல் கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது. இதில், புளியங்குளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள்‌ ஹரிஷ்குமார் (15), ரவிச்செல்வம்(17) பணிக்குச் சென்ற னர். இதில் ஹரிஷ்குமார் விருதுநகர் அருகே உள்ள சின்னப்பேராலி கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து, விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புக்கான தேர்வு எழுதி முடித்துள்ளார். தற்போது பள்ளியில் கோடை விடுமுறை விடப்பட்டதால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

மாணவர் ரவிச்செல்வம் அருகே  உள்ள நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். இரு மாணவர்களும் உறவினர்கள் ஆவர்.  இந்நிலையில், தங்களது மேல்படிப்பு செலவுக்காக கோடை விடுமுறையில் தங்க ளது உறவினரான முத்துராமன் என்பவர் மூலம் அரசு கல்லூரியில் கட்டுமானப் பணிக்கு சென்றுள்ளனர்.   இருவரும் வேலை செய்து கொண்டி ருந்த போது, சிமிண்ட் கலவையை மேல் தளத்திற்கு மின்சாரம் மூலம் கொண்டு செல்லும் தொட்டி அறுந்து கீழே விழுந்துள் ளது. இதையடுத்து, இருவரும் அந்த தொட்டியை தூக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மின்சா ரம்  பாய்ந்தது. இதையடுத்து,  ரவிச்செல்வம் மற்றும் ஹரிஷ்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்தநிலையில், அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார்‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு உத்தரவு 

மேலேந்தல் கிராமத்தில் அரசு கல்லூரி கட்டிட பணியில் இரு மாணவர்கள் உயிரி ழந்தது குறித்து தொழிலாளர்துறை விசா ரணை நடத்த மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் உடனடியாக உத்தரவிட்டுள்ளார். தலா ரூ.50 லட்சம் நிவாரணம்   இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே. அர்ஜூனன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியதாவது : திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் அரசுக் கல்லூரி கட்டிடப் பணி யின் போது மின்சாரம் தாக்கி இரு மாண வர்கள் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் துயரமான சம்பவமாகும். இம்மாணவர்க ளை பிரிந்து வாடும் குடும்பத்தார்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருது நகர் மாவட்டக்குழு சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது. 18 வயது நிரம்பாத பள்ளி மாணவர்களை கட்டிடப் பணி யில் ஈடுபடுத்திய ஒப்பந்ததாரர் மீது தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கடுமை யான  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்தார்க்கு தலா ரூ.50 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.