மதுரை, டிச.8- மதுரை மாநகராட்சியில் உள்ள அருள்தாஸ்புரம், தத்தனேரி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம் படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி நிர் வாகம் 21 , 22 ஆவது வார்டு களில் உள்ள பாதாளச் சாக்க டைகளை சீராமைக்க வேண் டும். குடிநீரில் கழிவுநீர் கலப் பதை தடுத்திட வேண்டும். தெரு மற்றும் முக்கியமான சாலைகளை செப்பனிட வேண்டும். திரு.வி.க. பள்ளி அருகே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும். தத்த னேரி பாலம் சந்திப்பில் போலீஸ் பீட் அமைக்க வேண்டும். தத்தனேரி இ. எஸ். ஐ மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் 7 புத னன்று மதுரை மாநகர் வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு சார்பில் தெருமுனைக்கூட் டம் நடைபெற்றது. அருள்தாஸ்புரம் தண் ணீர் தொட்டி அருகில் நடை பெற்ற கூட்டத்திற்கு ஆர். பிச்சை தலைமை வகித்தார். டி. தங்கமாயன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட் டச் செயலாளர் மா.கணே சன், மாநிலக்குழு உறுப்பி னர் எஸ். கே. பொன்னுத் தாய் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. ராதா, மாமன்ற உறுப்பினர் டி. குமர வேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா.பழனியம் மாள், பகுதிக்குழு உறுப்பி னர்கள் டி.ஆறுமுகபெரு மாள், வி. பாலசுப்பிரமணி, எல்.ஞானசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.