districts

img

27 ஆவது வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி சிபிஎம் தெருமுனைக்கூட்டம்

மதுரை, நவ.29- மதுரை மாநகராட்சி 27 ஆவது வார்டில் குண்டும்  குழியுமாக உள்ள  60 அடி  சாலை மற்றும் சேதமடைந் துள்ள அனைத்து தெருச்  சாலைகளையும் புதிய சாலை  யாக அமைத்திட வேண் டும்,  சாலைகளில் பாதாளச்சாக்  கடை கழிவு நீர் ஓடுவதை தடுத்திட வேண்டும். செல் லூர் பகுதியில் மேலும் ஒரு  கழிவு நீரேற்று நிலையம்  அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ  னிஸ்ட் கட்சியின் மதுரை மாந கர் வடக்கு 2 ஆம் பகுதிக்  குழு சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. செல்லூர்  மகான் காந்தி சாலையில் நடைபெற்ற இயக்கத்திற்கு 27 ஆவது வார்டு கிளைச் செயலாளர்  என். ராஜா தலைமை வகித்  தார். கிளைச் செயலாளர்கள் ஜெ. ராஜூ, எஸ். பழனிக் குமார் முன்னிலை வகித்த னர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன்,  மாநிலக்குழு உறுப்பினர்  இரா. விஜயராஜன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். பகுதிக்குழு செயளாளர் ஏ. பாலு,  மாவட்டக்குழு உறுப்பி னர் கே. அலாவுதீன், பகு திக்குழு உறுப்பினர்  கே.  ஜாஹிர்உசேன் ஆகியோர் பேசினர்.கிளைச் செயலா ளர் கே.சதீஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.