தேனி, ஜூன் 7- அடிக்கடி ஏற்படும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர்ப் பலியை தடுக்க புறவழிச் சாலை திட்டத்தை உடனடி யாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை குறுகலாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படு கிறது. இதன் காரணமாக நிகழும் விபத்தால் உயிர்ப் பலி ஏற்படுவதோடு ,பலர் மாற்று திறனாளியாகும் அபாயம் ஏற்படுகிறது .நக ரில் போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்த உடனடி யாக புறவழிச்சாலை அமை க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது . கையெழுத்து இயக் கத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் மா.தங்கராஜ் தலைமை வகித்தார் . மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.வெங்கடேசன் கையெ ழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார் .மாவட் டக்குழு உறுப்பினர் கே.தயா ளன் ,சிஐடியு தலைவர் தங்க வேல், பி.டி.ராஜா, முருகன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.