விருதுநகர், ஜன.26- விருதுநகர் மாவட்ட நிர் வாகமானது, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடை பெற்ற ஆலோசனைக் கூட் டத்தில் ஜனவரி 26 முதல் புதிய பேருந்து நிலையம் செயல்படும் எனவும், இங்கி ருந்து தொலைதூரப் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும் எனவும் அறி வித்துள்ளது. ஆனால், என்ன காரணத்தினாலோ குடியரசு தினத்தன்று புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வரவழைக்கப்படவில்லை. எனவே, இதனைக் கண் டித்தும் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத் தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு நகர்மன்ற உறுப்பினர் கோ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். துவக்கி வைத்து நகரச் செயலாளர் எல்.முரு கன் பேசினார். மூத்த தலை வர் எஸ்.பாலசுப்பிரமணி யன் நிறைவுரையாற்றினார். மேலும் இதில்,நகர்க்குழு உறுப்பினர்கள் ஏ.பாலமுரு கன் ஐ.ஜெயா மற்றும் ராஜா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.