districts

img

நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி. டிச.9- பாளையங்கோட்டை ராஜேந் திர நகரில் 6 ஆவது தெருவில் 2 வருடங்களாக தண்ணீர் குழாய் கள் தோண்டப்பட்ட பள்ளம் இது வரை மூடப்படவில்லை. இது குறித்து அங்குள்ளவர்கள் மாநக ராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே இதனை கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை ராஜேந்திர நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் பூ.கோபாலன் தலைமை தாங்கினார், கட்சியின் பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் துரை ஆர்ப்பாட டத்தை துவக்கி வைத்து பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் வெங்கடா சலம், ரஞ்சித்குமார் நெடுஞ்செழி யன், ஓய்வு பெற்ற உதவி ஆய்வா ளர் ராஜன் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். முன்னதாக மூடப்படாத  பள்ளத்தில் வெள்ளைத்துணி யில் மாலை வைத்து அதற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.