மதுரை, ஏப்.13- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் டி.நகர் பகுதியில் உள்ள 80 குடும்பங்களுக்கு வீட்டுவரி ரசீதை பாறை பட்டி ஊராட்சியில் இணைத்திடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாடிப்பட்டி தாசில்தார் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் தமிழக அரசினை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் செ.தங்கம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆண்டிச்சாமி, எம்.சேது ராஜன், ஏ.ராஜூ, எம்.ஆறுமுகம், எஸ்.கே. அழகர் ஆகியோர் உட்பட பலர் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமா மகேஸ்வரன் விளக்கிப் பேசினார். கிராம மக்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், பாறைபட்டி டி.நகர் பகுதியில் வசித்து வரும் 80 குடும்பங்களில் ஆதார் கார்டு, வங்கி கணக்கு, வாக்கா ளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவை பாறைபட்டி ஊராட்சியில் உள் ளது. குடியிருப்பு மட்டும் கோடாங்கிபட்டி ஊராட்சியில் உள்ளது. எனவே, 80 குடும் பங்கள் அரசு சலுகைகளைப் பெற்றிட வீட்டு வரி ரசீது பாறைபட்டி ஊராட்சியில் இணைத் திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.