districts

img

திற்பரப்பு சாலையை சீரமைக்க கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக்.27-      கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமான திற்பரப்பு அருவிக்கு செல்லும் முக்கிய சாலை ஆண்டுக்கணக் கில் குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையில் நடக்கும் விபத்துகளை தடுக்க உடனடியாக சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்டோபர் 26 புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திற்பரப்பு வழியாக களியல் செல்லும் சாலை உண்ணியூர்கோணம் முதல் சுமார் 5 கிலோ மீட்டர் பழுதடைந்த நிலையில் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அழகியபாண்டியபுரம்-களியல் கூட்டுக்குடி நீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகளுக்காக இந்த சாலை நெடுகிலும் குழி தோண்டப் பட்டது. குழாய் பதித்த பிறகு சாலையை சீரமைக்காமல் ஆண்டுக்கணக்காக கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் உள்ளுர் மக்களும் சுற்றுலா பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திற்பரப்பு சந்திப்பில் மறியல் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் திரண்டனர்.

அதிகாரிகள் தலையிட்டு சாலை சீரமைப்பு குறித்து வாக்குறுதி அளித்தனர். அப்போது அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்னரும் பணிகள் துவக்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் மறியல் போரா ட்டம் நடத்த முடிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று கட்சி யின் மாவட்டசெயலாளர் ஆர்.செல்ல சுவாமி தலைமையில் பிணந்தோடு சந்திப்பில் திரண்டனர். முன்னதாகவே ஏராளமான காவல்துறையினர் தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இரண்டு மாதங்களில் (டிசம்பர் மாதத்துக்குள்) சாலையை முழு மையாக சீரமைப்பதாக வாக்குறுதி அளித்த னர். அதன்படி மறியலை கைவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி கலைந்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் திற் பரப்பு பேரூராட்சி துணை தலைவருமான எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், வட்டார செயலா ளர் பி.விஸ்வம்பரன், திற்பரப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஜுடஸ் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் என்.ரெஜீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.