districts

img

மதுரை விளாங்குடி பகுதியில் நிரம்பி வழியும் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாருக!

மதுரை, டிச.22-  மதுரை  மாநகராட்சி விளாங்குடி ஆசிரி யர் காலனி முதல் 20வது வார்டு சொக்கநாத புரம் முக்கிய வீதியில் 600மீட்டர் நீளத்திற்கு  செல்லக்கூடிய கழிவுநீர் வாய்க்கால் 8ஆண்டுகளாக தூர்வாரமல் இருப்பதால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் மைய மாக விளங்குகிறது. உடனடியாக தூர்வா ரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி மதுரை மாநகராட்சி ஆணையர், துணை மேயர் ஆகி யோரிடம் மனு அளிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதி யில் பிரதான கழிவுநீர் வாய்க்கால் ஆசிரியர்  காலனி முதல் சொக்கநாதபுரம் முக்கிய வீதி  வரை செல்கிறது. இந்த கால்வாய் கட்டி  6 ஆண்டுகள் ஆகிறது.அப்போது முதல் இது வரை தூர்வாரும் பணி  நடைபெறவில்லை. இந்த கால்வாய் தற்போது குப்பைகளும் மனித கழிவுகளும் நிரம்பி காட்சியளிக்கி றது. அதுமட்டுமின்றி விஷ பூச்சிகளும் குடி கொண்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். எனவே மாநகராட்சி ஆணையாளர் துரித மாக தலையிட்டு மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கும், அதன் மூலம் ஏதாவது உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன் உடனடியாக வார்டு1- 20க்குள் ஆசிரியர் காலனி முதல் சொக்கநாதபுரம் மெயின்  வீதி வரை செல்லக்கூடிய இந்த கால்வாயை தூர்வாருமாறு பொதுமக்களின் சார்பாக வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகவும் மனு அளிக்கப்பட்டது.  கட்சியின் புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி, மேற்கு  ஒன்றியச் செய லாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்  பினர் எஸ்.பாலகிருஷ்ணன்,  ஒன்றியக் குழு உறுப்பினர் லெனின் இரவீந்தரன் ஆகியோர் மனுவை அளித்தனர்.