districts

img

சாலை அமைக்கக்கோரி கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சிபிஎம்-மக்கள் முற்றுகை

சிவகங்கை,ஜூன் 13- கிராமச் சாலைகளை உடனடியாக போடுவதற்கு ஒன்றிய நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிவ கங்கை மாவட்டம் கல்லல்  ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் முற்றுகை யிட்டனர். இப்போராட்டத்திற்க்கு  கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்  தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்,  மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், பால் உற்பத்தி யாளர் சங்க மாவட்ட செய லாளர் வேணுகோபால், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் சக்திவேல், பாக்கிய லட்சுமி ,பாலு ,ராமமூர்த்தி , பழனி குமார், சாத்தனூர்,  கள்ளிப்பட்டு,  பொன்னங் குடி கிராம மக்கள் கிராம  மக்கள் கலந்து கொண்டனர். ஆணையாளர் சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் செழியன் ஆகியோர் போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து சாலைகளும் மதிப்பீடு தயார் செய்து அனு மதி கேட்டு நிதிக்காக அனுப்  பப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை  மாதம் சாலைகளை போடு வதற்கு அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பின்பு போராட்டம் முற்றுகை போராட்  டம் முடிவுக்கு வந்தது.