இராமநாதபுரம்,டிச.20- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பரமக்குடி முன்னாள் நகர் செயலா ளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயற் குழு உறுப்பினர், வெகு ஜன தலைவர் ஓவியர் எம்.மூர்த்தி (வயது 59) திங்களன்று காலமானார். அவர் காலமான செய்தி அறிந்ததும் மாவட்ட முழுவதும் இருந்து சிபிஎம் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி காசிநாத துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன், ஆர். குருவேல் ,எம் சிவாஜி, எம்.முத்து ராமு, வி.மயில்வாக னன், இ. கண்ணகி ,கே கருணாகரன் மற்றும் தாலுகா செயலாளர் பி செல்வராஜ் ,சிஐடியு நிர்வாகிகள் எஸ்.ஏ சந்தானம் ஆர் முத்து விஜயன் மற்றும் தமுஎகச மாவட்ட செயலா ளர் டாக்டர் வான் தமிழ் இளம் பரிதி ,அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி சேகர் ,சிறு பான்மை நலக்குழு மாவட்ட நிர்வாகி என். வெங்கடேஷ் வாலிபர் சங்கம் மாவட்ட செய லாளர் தட்சிணாமூர்த்தி , விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி ராமலட்சுமி. விவசா யத்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் கணேசன் மற்றும் அங்குதன் உள்பட பலர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.