districts

img

சாலையை சீரமைக்கக் கோரி சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்

திருவட்டார், டிச.15 - கன்னியாகுமரி மாவட்டம் ்செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட புலிப்புனம் குட்டக்குழி ரோட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தால் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் முழுமையாக மூடி கருந்தளம் போடப்படாததால் தினமும் விபத்துகள் ஏற்பட்டு வரு கிறது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கேட்காதவர்களாக உள்ளனர். இதனை கண்டித்து  புதன்கிழமை காலைமுதல் ரோடு செப்பனிடும் வரை பொதுமக்களோடு இணைந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்   கட்சி யின் செறுகோல் கிளைகள் சார்பில் காத்திருப்பு போராட்டம்  நடைபெற்றது. போராட்டத்திற்கு  திருவட்டார் வட்டார குழு உறுப்பினர் எ.பென் ஜேக்கப் தலைமை தாங்கினார்.    

                   எஸ்.நடராஜன், ஆர்.மீல்ராஜ்,       ஆர்.அல்போன்ஸ், எஸ்.ஜோஸ் வா ஆகியோர் முன்னிலை வகித்த னர். முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஆர்.லீமாறோஸ் துவக்கி வைத்தார். வட்டார குழு செயலாளர் ஆர்.வில்சன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சகாய ஆன்றணி, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சி.ஆர்.இராஜகுமார்,விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்.ரத்தினகுமார் உட்பட பலர் பேசினர். இப்போ ராட்டத்தில் நூறுக்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்கள் ரோட்டில் கஞ்சி காய்ச்ச தயாரானபோது காவல் துறை யினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியா ளர் வரவழைக்கப்பட்டார். ஜனவரி 15 ம் தேதிக்குள் சாலை செப்ப னிட்டு சீர்செய்து தரப்படும்   என எழுத்து பூர்வமாக உறுதியளித்த தால்  காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது.