மதுரை, டிச.28- அனைத்து மாநகராட்சிப் பள்ளி களிலும் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் சிபிஎம் கவுன் சிலர் டி.குமரவேல் வலியுறுத்தினார். மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் வ. இந்திராணி, ஆணையாளர் சிம் ரன்ஜித் சிங், துணை மேயர் டி. நாக ராஜன் ஆகியோர் தலைமையில் டிசம்பர் 28 புதனன்று மதுரை மாநக ராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 15 மேல்நிலைப் பள்ளி களில் 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டிற் கான 38 முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் தற்காலிக மாதாந்திர மதிப்பூ தியத்தில் பணியாற்றிட ஒப்புதல் கூறும் தீர்மானம், 9 ஆவது வார்டு உத்தங்குடி பகுதியில் உள்ள மங்களக்குடி கிராமம் மற்றும் 10 ஆவது வார்டு எஸ். கொடிக் குளம் ஆகிய பகுதிகளில் சாலை மற் றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடங்களை மாநகராட்சி பெயருக்கு மாற்றம் செய்தல் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங்கில் ரவுடிகள் அட்டகாசம்
58 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் ஜெயராமன் பேசுகையில், ஆரப் பாளையம் பேருந்து நிலையத்தை அகலப்படுத்த வேண்டும். கரிமேடு காவல்நிலையம் ரூ.56 லட்சம் வரி பாக்கி உள்ளது. அது வசூல் செய்ய வேண்டும். மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங்கில் ரவுடிகள் அட்ட காசம் அதிகரித்துள்ளது. மாநகராட்சி பார்க்கிங்கிற்கு கட்டணம் ஒன்று நிர்ண யித்தால் அந்த கட்டணத்தை மட்டும் வாங்கிவிட்டு, மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் நிறுத்தப்படும் கட்ட ணத்தை அங்குள்ள ரவுடிகள் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே மாநகராட்சி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குருவிக்காரன் பாலம் அருகில் தடுப்பணை அமைத்திடுக! கூட்டத்தில் தெற்குத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் பேசு கையில், அம்ருத் திட்ட குழாய் பதிக் கும் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங் கள் சரியாக மூடப்படாமல் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக உள் ளது. அவற்றை உடனடியாக சீர மைக்க வேண்டும். முனிச்சாலை முதல் நெல்பேட்டை வரை உள்ள சாலை கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவற்றை உடனடியாக சரி செய்திட வேண்டும். குருவிக்காரன் சாலை பாலம் அருகில் தடுப்பணை அமைத்து தெப்பக்குளத்திற்கு தண் ணீர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு களை செய்தால் அங்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்குவதற்கான ஏற்பாடும் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்ய முடியும், அடிப் படை வசதிகளை செய்ய நிதி இல்லை என்ற நிலையில் மாட்டுத்தாவணி மார்க் கெட் வாடகை வசூல் செய்ய வேண்டும் என்று கூறினார்.
64 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் சோலைராஜா பேசுகையில், மதுரை மாநகர் பகுதியில் ரூ.23.55 கோடிக்கு சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இப்பணி கள் எப்போது துவங்கும், எப்போது முடியும் என்று நகர் பொறியாளர் தெரி விக்க வேண்டும்,4 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. இதை ஒரு நாள் விட்டு ஒருநாள் விநியோகிக்க உத்தர விட வேண்டும் என்றார். ஜனவரியில் துவங்கி மார்ச் மாதத் திற்குள் சாலைப் பணிகள் முடிக்கப் படும் என்று நகர் பொறியாளர் பதில ளித்தார். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவில் மாடுகள் திரிகின்றன. தெருப் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது, பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வார்டுக்கு ஒரு இடத்தில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வரி பாக்கிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் பேசினர். இதனைத்தொடர்ந்து மேயர் மற்றும் ஆணையாளர், அதிகாரி கள் ஆகியோர் மாமன்ற உறுப்பி னர்களின் கேள்வி பதில் அளித்து பேசினர். உடனடியாக தீர்க்கக் கூடிய பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் சில பிரச்சனை களுக்கு ஆய்வுகள் மேற்கொண்டு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் பதி லளித்தனர்.
கூட்டத்தில் 23 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் பேசு கையில், மாநகராட்சி கஸ்தூரி பாய் பள்ளியில் தூய்மை பணி யாளர்கள் மற்றும் வாட்ச் மேன்கள் இல்லை. இதனால் பள்ளியில் பயி லும் மாணவர்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்யக்கூடிய சூழ்நிலை உள்ளது. மதுரை தத்தனேரி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 1256 மாணவர், மாணவிகள் படிக்கும் நிலையில் போதுமான கழிப்பறை வசதி இல்லை. மேலும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளி லும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
செல்லூர் -குலமங்கலம் சாலைப்பணி எப்போது துவங்கும்?
மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்காவில் சிறுவர்கள், சிறுமியர்கள் பயன்படுத்தும் விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை உடனடியாக சீர மைக்க வேண்டும். பெரியார் பேருந்து நிலைய காம்ப்ளக்ஸ் பணிகள் வேலை எப்போது முடியும் ?. பெரியார் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உட்கார இருக்கை வசதி இல்லை. அரசு போக்குவரத்து ஓட்டுநர், நடத்துநர்கள் உணவு உட்கொள்ள, ஓய்வுபெற ஓய்வறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மதுரை ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பிரதான சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இது சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே அவற்றை முறைப்படுத்த வேண்டும். செல்லூர் -குல மங்கலம் பிரதான சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எப்போது பணிகள் துவங்கப்படும். மதுரை கோட்ஸ் பாலம் குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளது .இந்த பாலத்தில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே பாலத்தில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இந்த மாத ஊதியம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்த மாக மேயரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது நட வடிக்கை எந்த நிலையில் உள்ளது?. மாநகராட்சி தொழிலா ளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சியர் தலை மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அமல்படுத்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது. மாநகராட்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய தமிழக அரசு கொண்டு வந்துள்ள 152 பிரிவு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.