districts

img

எதிலும் விளம்பரத்தைத் தேடி அலைவதா?

துவரிமான் - பரவை பாலம் தொடர்பாக பாஜகவின் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம் கூறு கையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன் மாறன் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக் கையால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த பாலத்தை கட்டு வதற்கான நிதியை ஒதுக்கி, அறிவித் தார். இந்த பகுதியில் இப்பாலத்தை கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக பல போராட் டங்களை நடத்தியது. தற்போது பாலத்தை திறக்க வேண்டும் என்று கோரி  போராட்டத்தையும் நடத்துகிறது.  மக்கள் பிரச்சனைகளுக்காக மார்க் சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராடி வருகிறது.இதனை இப்பகுதி மக்கள் நன்கு அறிவர்.  ஆனால் மக்களுக்கு எந்த சேவையும் செய்யாத  பாஜக வினர் இதில் விளம்பரம் தேடிக்கொள்ள ஆசைப்படுகின்றனர். எதிலும் விளம்ப ரம் தேடி, வெற்று ஜம்பம் அடிக்கும் பாஜகவினரின் இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; விமர் சித்துள்ளனர். பாலத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட் டோம் என்ற பாஜகவினரின் பொய்ப் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது’’ என்று தெரிவித்தார்.