திண்டுக்கல், மார்ச் 3- பழனி நகர்மன்ற துணைத்தலைவர் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழனி நகரச் செயலாளரும், 15-ஆவது வார்டு மன்ற உறுப்பினருமான கே.கந்தசாமி அறிவிக்கப் பட்டுள்ளார். இவருக்கு கே.எஸ்.சூரியாசரன் என்ற மகன் உள்ளார். இவர் பழனி லட்சுமிபுரத்தில் குடியிருந்து வருகிறார். 3-ஆவது முறையாக பழனி நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வடமதுரை பேரூராட்சி துணைத்தலைவருக்கான சிபிஎம் வேட்பாளர் எம்.மலைச்சாமி
வடமதுரை பேரூராட்சி துணைத்தலைவர் வேட் பாளராக 12-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வடமதுரை ஊராட்சி ஒன்றிய சிபிஎம் செயலாளரான எம். மலைச்சாமி அறிவிக்கப்பட் டுள்ளார். செங்குளத்துப்பட்டி யில் வசித்து வரும் இவருக்கு, முனியம்மாள் என்ற மனைவி யும், மருதநாயகம் என்ற மக னும், ராஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவரது தொழில் விவசாயம் ஆகும். மேலும் தீக்கதிர் முக வராகவும் உள்ளார்.