districts

img

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்

மதுரை,ஏப்.15-   மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசினை கண்டித்தும்,  வேலை வாய்ப்புகளை உருவாக்க பொது முதலீட்டை அதிகப்படுத்திட கோரியும், 100 நாள் வேலைக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தக்  கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை புறநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  செல்லம்பட்டி  ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செயலாளர் வி.பி.முருகன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெ.காசி, சி.குருசாமி ஆகியோர் பேசினர். மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் பா.ரவி நிறைவுரையாற்றினார்.  விரகனூரில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு  தாலுகா குழு உறுப்பினர் எம்.சேதுராமன் தலைமை வகித்தார். தாலுகாச் செயலாளர் ஏ.தனபாலன், தாலுகா குழு உறுப்பினர் ஏ.முருகன் ரவிச்சந்திரன், எம்.போஸ் மருதுபாண்டி  ஆகியோர் பேசினர். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா நிறைவுரயாற்றினார்.  திருமங்கலம் தாலுகா குழு சார்பில்  மேலகோட்டையில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கிளைச் செயலாளர் மாரிசெல்வம் தலைமை வகித்தார். தாலுகாச் செயலாளர் ஆர்.மூர்த்தி தாலுகா குழு உறுப்பினர்கள் ஜி.முத்துராமன், இ.எம்.முருகேசன், ஆகியோர் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஏ.இளங்கோவன் நிறைவு செய்து பேசீனார்.. புங்கக்குளத்தில் நடைபெற்ற பிரசாத்திற்கு கிளைச் செயலாளர் அர்ஜூனன் தலைமை வகித்தார். தாலூகச் செயலாளர் ஆர்.மூர்த்தி, தாலுகா குழு உறுப்பினர்கள் ஜி.முத்துராமன், இ.எம்.முருகேசன், விரபாண்டி, சுந்தர்ராஜன்  ஆகியோர் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.செல்லக்கண்ணு நிறைவுரையாற்றினார்.