districts

img

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு சிபிஎம், தீ.ஓ.முன்னணி தலைவர்கள் மரியாதை

தேனி, டிச.6-  இந்தியாவின் அரசியல மைப்பு சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர்  6 செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி சார்பில் அம்பேத்  கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேனி, போடி, பெரியகுளம், தேவாரம் உள்ளிட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்  டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட் டது. தேனி அரண்மனை புதூரில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.  ஜெயபாண்டி டி. நாகராஜ்இ தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலையணிவித்து, உறுதிமொழி ஏற்றனர். தேவாரத்தில் தமிழ்நாடு தீண்  டாமை ஒழிப்பு முன்னணி டி.கே.சீனி வாசன் தலைமையில் மாலை  அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்  றது. பெரியகுளத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரேம் குமார்  சௌந்தரபாண்டியன் எஸ்.கணே சன் உள்ளிட்டோர் மாலை அணி வித்தனர். போடியில் அம்பேத்கர் உரு வப்படத்திற்கு கட்சியின் மூத்த  தலைவர் கே.ராஜப்பன், விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் உள்ளிட்டோர் மரி யாதை செலுத்தினர். விருதுநகர் 

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்  னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கர் உருவச்  சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திருவில்லிபுத்தூர் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே. அர்ஜுனன் தலை மையில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, உறுதிமொழி யேற்றனர். மாவட்டக்குழு உறுப்பி னர் திருமலை, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் மரிய டேவிட் ,போக்கு வரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல  அமைப்பின் மாவட்ட நிர்வாகி தங்கப்பழம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சத்திரரெட்டியபட்டியில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு முன்னணியின் மாவட்ட பொருளாளர் எம்.சுப்பு ராம், அருப்புக்கோட்டை ஒன்றியம் குருந்தமடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிபிஎம் கிளை செய லாளர் வனலிங்கம் தலைமையேற் றனர். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச் சாமி, மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார், மாநிலக்குழு உறுப்  பினர் எம்.ஊர்காவலன், மாவட்டக்  குழு உறுப்பினர் எம்.பெருமாள் சாமி, வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் எம்.ஜெயபாரத் உள் ளிட்டோர் பங்கேற்றனர். சாத்தூர் ஒன்றியம் ஸ்ரீரெங்கா புரத்தில் சிபிஎம் கிளை செயலாளர்  ஞானக்குமார் தலைமையில் முன்  னணியின் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.சி.பாண்டியன், எஸ். மனோஜ்குமார் ஆகியோர் பங்கேற்  றனர். திருத்தங்கல்லில் பி.எம்.பெரிய நாயகம், எம்.முத்துச்சாமி ஆகி யோர் தலைமையில் ஆசிரியர் சங்கத் தலைவர் கா.சிவபெருமான் சிறப்புரையாற்றினார். இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் முகவூரில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தி உறுதியேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சிபிஎம் மாவட்டக்  குழு உறுப்பினர் ராமர் ,முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனிய சாமி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

மதுரை 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மதுரை மாநகர்- புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்  பாக மதுரை அவுட் போஸ்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கே. சசிகலா, மாவட்டப் பொருளாளர் ஜா. நரசிம்மன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் செ. ஆஞ்சி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பாக அம்  பேத்கர் நினைவேந்தல் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குழந் தைவேல், தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதா னந்தம், பேராசிரியை பாலசுந்தரி, சிபிஎம் மாமன்ற கவுன்சிலர் கே.எஸ்.கணேசன், மதுசூதனன் (திமுக), விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி திருச்சித்  தன், பேரவை கௌரவ ஆலோ சகர் பெருமாள். மாவட்ட நிதிச் செயலாளர் சி.கோவிந்தராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.