திண்டுக்கல், மே 20- திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய தீர்மானத்தில் சிறுமலை அண்ணா நகர் என்பதற்கு பதிலாக சக்கிலிய பட்டி என்று பெயர் மாற்றி பதிவு செய்ததற்கு சிபிஎம் ஒன்றியக் கவுன்சிலர்கள் கடும் ஆட்சேபணை யும் கண்டனமும் தெரிவித்தனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றி யக்குழு கூட்டம் வெள்ளியன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அ.ராஜா தலைமை வகித்தார். இக்கூட்டத் தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மா னங்கள் விவாதிக்கப்பட்டன. இத்தீர்மானத்தில் சிறுமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமையலறையுடன் கூடிய வைப்பறையில் பழுது நீக்கம் செய்வதற்கு ரூ.1.450 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக குறிப் பிட்டு இருந்தது.
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ள ஊரின் பெயர் சக்கிலியபட்டி என்று ஊராட்சி ஒன்றிய விவாதப்பொரு ளில் குறிப்பிட்டு இருப்பதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர் என் என்.செல்வநாயகம், ஜீவாநந்தினி ஆகி யோர் கடுமையாக ஆட்சேபித்த னர். சமூக நீதிக்கு துணை நிற்கும் திமுக அரசு தலைமை வகிக்கும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத் தில் விவாதப் பொருளில் ஒடுக் கப்பட்ட ஒரு சாதியின் பெயரை எழுத்தில் குறிப்பிட்டது சட்டப்படி குற்றம் என்று கடுமையாக வாதிட் டனர். இது தொடர்பாக சிபிஎம் ஒன்றி யக் கவுன்சிலரகள் என்.செல்வநாய கம் ஜீவாநந்தினி ஆகியோர் கூறும் போது, அரசு அலுவலகங்களில் ஒரு உத்தரவு போடும் போது ஊரின் பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது. பொதுவாக சிறுமலையில் அந்த ஊரை அண்ணா நகர் என்று தான் இன்று வரை அழைத்து வருகிறார்கள். பேருந்து பயணிகள் கூட சிறு மலைக்கு வரும் போது அண்ணா நகர் என்று சொல்லி டிக்கெட் எடுக்கி றார்கள். வாக்காளர் அட்டையிலும் அண்ணா நகர் என்று தான் உள் ளது. அப்படி இருக்கும் போது சக்கி லியபட்டி என்று சாதியின் பெயரை தீர்மானத்தில் இணைத்தது யார், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இந்த தீர்மானத்தில் உள்ள வாச கத்தை மாற்ற வேண்டும். மீண்டும் இது போன்ற தவறு நடைபெறா மல் இருக்க ஊராட்சி ஒன்றிய அதி காரிகளை எச்சரிக்க வேண்டும் என்று செல்வநாயகம் பேசினார். (நநி)