சின்னாளப்பட்டி, ஜூலை 20- நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் துவக்கப்பள்ளி பழைய கட்டிடங்களை இரவோடு இரவாக இடித்து அள்ளிச் சென்று விற்பனை செய்வ தாக திமுக கவுன்சிலர்கள் உள்பட 7 பேர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவின் ரெஜினாநாயக மும் துணைத் தலைவராக அதிமுக ஒன்றிய செய லாளர் யாகப்பனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் மழைக்காலம் துவங்குவதற்கு முன் கிராமப்புற ஊராட்சி பகுதிகளி லுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பழைய கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் விடுமுறை மற்றும் இரவு நேரத்தில் இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டதை அடுத்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏழு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 11-பழைய கட்டிடங்களை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர் இரவு நேரத்தில் இடித்து கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறி திமுக கவுன்சிலர்கள் திமுக ஆதரவு சுயேட்சை கவுன் சிலர்கள் ரூபிசகிலா,ராஜதுரை,சுதந்திரதேவி, பாலமுருகன், கணேசன் உட்பட 6 பேர் நிலக்கோட்டை ஒன்றிய அலுவலக வாயிலில் வாயில் கருப்புத்துணி கட்டி முக்காடு போட்டு அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றிய தலைவர் அதிமுக-வைச் சேர்ந்தவர் என்பதால் அலுவலகத்திற்கே வருவ தில்லை எனவும் இதனைப் பயன்படுத்திய வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பொறியாளர்கள் கூட்டுச் சேர்ந்து பல போலி பில்களைக் கொண்டு பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாகவும் இதனால் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து முறைக்கேடு.செய்தவர்கள் மீத கடும் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரி வித்தனர்.