districts

கவுன்சிலர்-மக்களின் வலியுறுத்தலால் மழையால் பாதித்த விரிவாக்கப்பகுதியில் அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மதுரை மாநகராட்சிப் பணிகளில் தொய்வு என ஆதங்கம்

மதுரை, அக்.23-  மதுரை மாநகராட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாலைகள் படுமோசமாக உள்ளது என்ற குற்றச்சாட்டுகளை மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய நிலையில், அமைச்சர் பி.மூர்த்தி சில பிரச்சனைகளை நேரில் ஆய்வு செய்தார். சமீபநாட்களாக பெய்து வரும் மழை யால் மதுரை மாநகரமே கடும் பாதிப்புக்குள் ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக விரிவாக் கப்பட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பேசிய மண்டலத் தலைவர் வாசுகி, “ கழிவு நீரும், மழை நீரும் சேர்ந்துதான் கண்மாய் நிரம்பு கிறது.  ஆனையூர்-மூன்றுமாவடி இடையிலான பிரதான சாலையில் தெருவிளக்குகள் பொருத்துங்கள், பிட்டிங்குகள் பிரச்சனை உள்ளது. தெருவிளக்கில் போதிய வெளிச்சம் இல்லை” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேசிய மாமன்ற உறுப்பினர் என்.விஜயா, “94,95,96-ஆவது வார்டுகளில் சாலைகள் மிக  மோசமாக உள்ளது. பணிகள் நடைபெறாததால் மக்கள் எங்களை தரக் குறைவாக பேசுகின்றனர். நீரேற்று நிலை யங்களில் கூடுதல் மோட்டார்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார். அமைச்சர் பி.மூர்த்தி மாநகராட்சி மன்றத்தில் பேசிய வாசுகியின் மண்டலத்தில் தான் குடியிருந்து வருகிறார். வாசுகியின் உரையைத் தொடர்ந்தும், பொதுமக்களிடமி ருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்ப டையிலும் அமைச்சர் சனிக்கிழமையன்று  ஆய்வு செய்தார். அப்போது மண்டலத் தலைவர் வாசுகி சுட்டிக்காட்டியிருந்த பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார்.

ஆய்விற்காக வருகை தந்த மதுரை மாநகராட்சி மேயரின் கார் சேறும்-சகதியும்-தண்ணீரும் நிறைந்திருந்த சாலையில் வருவதற்கே தட்டுத்தடுமாறியது. இதையடுத்து அமைச்சர்  பி.மூர்த்தி,  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆட்சி யர் அனீஷ்சேகர், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங்  காலோன் ஆகியோரிடம் தனது ஆதங் கத்தை வெளிப்படுத்தினார்.  “இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லை... முழங்கால் அளவிற்கு மண் உள்ளது... எப்படித் தண்ணீர் பேகும்... நீங்கள் எல்லாம் ஹைடெக்கில் குடியி ருக்கிறீர்கள்... நிதி ஒதுக்க மாட்டேன் என்கி றீர்கள்... டெண்டர் போட்டெல்லாம் இதை சரி பண்ண முடியாது. மூணு வருசமா இந்தப் பகுதி இப்படியே இருக்குது. போட்ட தார் ரோடு மேலேயே ரோடு போட்டுருக்கீங்க... நான் தான் உண்ணாவிரதம் உட்காரணும்...” என்று அமைச்சர் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, பிரச்சனைக்குரிய பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  நாகனாகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்கி யுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு, மழைநீர் வெளியேற்றப்படும்.  மழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற நடவடிக்கை   எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.