திருச்சிராப்பள்ளி, மே 8- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கல்மந்தை காலனி யில் நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு துறையின் அடுக்கு மாடி குடியிருப்பு வழங்குவ தில் உள்ள ஊழல் முறை கேடுகளை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கல்மந்தை காலனி பொதுமக்கள் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்திற்கு சிபிஎம் கிளைச் செயலாளர் மகா லிங்கம் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா, மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் லெனின், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் ஆகியோர் விளக்கிப் பேசி னர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், கல் மந்தையில் அரசு அடுக்கு மாடி வீடு கட்ட 60 ஆண்டு காலமாக குடியிருந்த வீட்டை காலி செய்து கொடுத்த 118 நபர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும், வட்டாட்சியர் ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியரால் பரிந் துரைக்கப்பட்ட பயனாளி கள் பட்டியலை புறக்க ணித்து வெளி ஆட்களுக்கு ஒதுக்கீடு செய்வதை கை விட வேண்டும், ஒன்றிய, மாநில அரசு நிதியில் கட் டப்பட்ட வீடுகளை அரசி யல் கட்சி நிர்வாகிகள் சில ருக்கு பங்கு போட்டு கொடுப் பதை கைவிட வேண்டும், ஊழல் மோசடிக்கு துணை போகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டன.