districts

img

மதுரை மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

மதுரை, ஏப்.11-  மாநகராட்சி ஒப்பந்ததாரர் சம் பளம் குறைத்து வழங்குவதைக் கண்டித்தும் தொழிலாளிகளை மிரட்டும் போக்கை கண்டித்தும் மதுரை மாநகராட்சி அண்ணா மாளி கையில் குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் டாடா ஏசி ஒப்பந்த ஓட்டுநர் கள் வாகனங்களை நிறுத்தி சிஐடியு தலைமையில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் ஒப்பந்த பணிமுறை மூலம் மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது. அதில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் டாடா ஏசி வாகன ஓட்டுநர் கள் 4 மண்டலங்களிலும் சேர்த்து 105 பேர் வரை பணி செய்து வருகின்றனர்.  இந்நிலையில் டாடா ஏசி வாகன பணிகளை மேற்கொள்ள செந்தில் மற்றும் சின்னமணி ஆகியோரை உரி மையாளராகக் கொண்ட ராம் அன் கோ என்கிற ஒப்பந்த நிறுவனம் 3 மாதத்திற்கு டெண்டர் எடுத்துள்ளது.

இந்நிறுவனம் மாநகராட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஓட்டுநர் களுக்கு ரூ. 14 ஆயிரம் சம்பளம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக கடந்த பிப்ரவரி மாதம் சம்பளமாக ரூ. 10 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர்.  இதனை வாங்க மறுத்த ஓட்டு நர்களை பணியை விட்டு நீக்கி விடுவ தாகவும், பணியில் தொடர வேண்டுமா னால் டெபாசிட்டாக ரூ.25 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அப் போதே மாநகராட்சி ஆணையர் மற் றும் துணை ஆணையர் கவனத்திற்கு சிஐடியு சங்கம் மூலம் எழுத்துப்பூர்வ மாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மார்ச் மாதம் சம்ப ளம் வழங்கும் போதும் 10 ஆயிரம் ரூபாயை மட்டும் வழங்கியதோடு மட்டு மின்றி ஓட்டுநர்கள் பணி செய்யும் இடத் திற்கே சென்று ஒப்பந்ததாரர் சின்ன மணி என்பவர் மிரட்டி சம்பளத்தை வாங்க வைத்துள்ளார். எனவே, வேறு வழியின்றி ஓட்டுநர்கள் அண்ணா மாளி கையில் தங்களது வாகனத்தை நிறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.  

இதுகுறித்து அறிந்த மேயர் இந்தி ராணி பொன்வசந்த், துணை ஆணை யர் மற்றும் சுகாதார அலுவலர் ஆகி யோர் சிஐடியு நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, சிஐ டியு நிர்வாகிகள் இரண்டு மாதங்களாக சம்பளம் குறைத்து வழங்கப்பட்டு ளது என்று கூறினர்.  சம்பளம் இரண்டு தினங்களில் வழங்கப்பட்டுவிடும் என்றும், சம்ப ளத்தை முறையாக வழங்கிட நடவ டிக்கை எடுக்கப்படுமென்றும், பொறி யியல் பிரிவுகள் அனைத்திலும் வங்கி மூலம் சம்பளம், வருகைப் பதிவேடு  பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்கள் ஒரு வார காலத்திற்குள் நடை முறைக்கு வருவது உறுதி செய்யப்படு மென்று நிர்வாகத்தின் தரப்பில் உறுதி யளித்தனர். அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் சிஐடியு மாநக ராட்சி சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், பொதுச்செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் முருகன், ரவி, நாச்சியப் பன், சரவணக்குமார், ரமேஷ், வைர மணி, தங்கபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.