districts

img

மதுரை வில்லாபுரத்தில் தொடர் மறியல்

மதுரை, நவ.14-  மதுரை வில்லாபுரம் அம்மச்சியார் கோவில் தெருவில் கடந்த சில மாதங்களாக  பாதாளச் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வீடுகளுக்குள் செல்வதால் மக்கள்   கொசுத்தொல்லையாலும் நோய்ப் பாதிப்பு  ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் செல்ல வழியின்றி கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இது குறித்து பாஜக மாமன்ற உறுப்பி னர், அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் திங்களன்று வில்லாபுரம் மெயின் ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் அப்பகுதி பொது மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டனர். பின்பு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் எம். பாண்டிய ராஜன் தலைமையில்  மறியலில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னர் யு.எஸ்.அபுதாகீர், கிளைச் செயலா ளர்கள் மீனாட்சி, சுபையா, மணி,  மாதர் சங்க  மாவட்டச் செயலாளரும் மாமன்ற உறுப்பி னருமான ஜென்னியம்மாள் மாவட்டக் குழு உறுப்பினர் சாந்தி, வாலிபர் சங்க பகு திக் குழுச் செயலாளர் போனிபேஸ்,  ஆறு முகம், கிளைச் செயலாளர் அரவிந்தன்,  பாலமுருகன் ஆகியோர்  கலந்து கொண்ட னர். அவனியாபுரம் மதுரை வில்லாபுரம் அம்மச்சியார் கோவில் தெருவில், கடந்த ஒரு வார கால மாக பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக மழை நீரு டன் சாக்கடை கழிவுகளும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். பிரச்சனையை தீர்க்க மாநக ராட்சி நிர்வாகம் முன்வராததால் அப்பகுதி மக்கள் திங்களன்று  மறியலில் ஈடுபட்ட னர்.