இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மார்ச் 7 அன்று ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையாளர் மரு.தாரேஸ் அகமது தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை முடித்திட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.