districts

img

தேனியில் காங்கிரஸ் கட்சியினர் மறியல்

தேனி, மார்ச் 23- பிரதமர் மோடியை விமர்  சனம் செய்ததாக தொட ரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2  ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததை தொடர்ந்து தேனியில் காங்கிரஸ் கட்சி யினர் பாஜகவை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தேனி நேரு சிலை அருகே  மாவட்ட தலைவர் எம்.பி. முருகேசன் தலைமையில் துணைத் தலைவர் எஸ்.ஆர். சன்னாசி, முஸாக் மந்திரி,  ஜம்பு சுதாகர் உள்ளிட்ட  100 க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர் . அவர்களை காவல்துறை யினர் கைது செய்து மண்ட பத்தில் அடைத்தனர்.

;