districts

img

திண்டுக்கல் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர்கள் தர்ணா

திண்டுக்கல், மார்ச் 21- திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக ஒதுக்கிய  நிதியை பணி செய்யாமல் கிடப்பில் போட்  டுள்ள ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளைக் கண்டித்து மார்ச் 21 அன்று சிபிஎம் கவுன் சிலர்கள் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி பகுதியில்  தார்ச்சாலை அமைப்பதற்காக கள்ளிப்பட்டி கிராமத்திற்கு 2021-22ம் ஆண்டு நிதி ரூ. 7.20 லட்சம் ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த நிதியை முறை யாக பயன்படுத்தவில்லை. இதனால் அப்  பகுதி பொதுமக்கள் தார்ச்சாலை இல்லாத தால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார் கள். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு  வரவேண்டும் என்று பல முறை மன்ற கூட்  டத்திலும் மாவட்ட ஆட்சியரிடமும் முறை யிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஒன்றிய பகுதிகளில் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவு கிறது. பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட கிரா மத்தில் குடிநீர் இணைப்புக்காக வரி வசூ லிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர்  இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கப் பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள்  தனியார் லாரி மூலம் குடிநீர் பெற்று குடித்து வருகின்றனர். பணிகள் நிறைவடைந்ததாக விளம்பர பலகை வைத்துவிட்டு பணிகள்  நிறைவடையாமலேயே தகவல் பலகை யை கழற்றிச்சென்றனர்.  இதே போல் சாக்கடை கழிவு நீரோடை, தெருவிளக்கு, பெண்களுக்கான கழிப்பிட வசதிகள் என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும் திட்டங்கள் செயல்படுத் தப்படவில்லை என்றும், இதற்காக ஒதுக்  கிய நிதியை முறையாக செயல்படுத்த வில்லை என்றும், இது தொடர்பாக ஆய்வு  செய்து மன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செட்டி நாயக்கன்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பா. செல்வநாயகம், பள்ளபட்டி ஒன்றிய பெண்  கவுன்சிலர் ஜீவாநந்தினி ஆகியோர் செயல்  படுத்தாத திட்டங்கள் குறித்த பிளக்ஸ் பேனர்  களை கையில் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பி கூட்டத்தொடர் முடியும் வரை தரை யில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி  முழக்கமிட்டனர்.